“உங்காத்தா ஒரு கொள்ளைக்காரி”… ஆ. ராசா மீது டிஜிபி அலுவலகத்தில் அதிமுக புகார்!

 

“உங்காத்தா ஒரு கொள்ளைக்காரி”… ஆ. ராசா மீது டிஜிபி அலுவலகத்தில் அதிமுக புகார்!

திமுக ஆ. ராசாவுக்கு எதிராக டிஜிபி அலுவலகத்தில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு புகார் அளித்துள்ளது.

“உங்காத்தா ஒரு கொள்ளைக்காரி”… ஆ. ராசா மீது டிஜிபி அலுவலகத்தில் அதிமுக புகார்!

கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி திமுகவின் 2ஜி வழக்கை குறிப்பிட்டு பேசினார் அப்போது பேசிய அவர், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் 1.76 ஆயிரம் அளவில் கொள்ளையடித்தது திமுக ஆட்சி என்றும் காங்கிரஸுடன் கூட்டணி இருந்த போதே இந்த ஊழல் நடைபெற்றது என்றும் இவர்கள் அதிமுக அரசு மீது குற்றம் சாட்டுகிறார்கள் என்றும் விமர்சித்து பேசினார் மெகா ஊழல் செய்துவிட்டு புத்தர், அரிச்சந்திரன் போல் பேசி வரும் திமுக தலைவர் ஸ்டாலின் விரைவில் 2ஜி வழக்கில் சிக்குவார் என்றும் கூறியிருந்தார்.

“உங்காத்தா ஒரு கொள்ளைக்காரி”… ஆ. ராசா மீது டிஜிபி அலுவலகத்தில் அதிமுக புகார்!

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக செய்தியாளர்களை சந்தித்த ஆ. ராசா, முதல்வர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. 2ஜி விவகாரம் குறித்து விவாதிக்க தயாரா என்று கேட்டதுடன், 3 நாட்களுக்கு பிறகு மீண்டும் செய்தியாளர் சந்திப்பில், “நான் சவால் விட்டு மூன்று நாட்கள் ஆகிவிட்டது . இன்னும் எடப்பாடிபழனிசாமிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இது உங்களுக்கு அசிங்கமாக இல்லையா ?உங்கள் பதவிக்கு இது அழகா? உங்காத்தா கொள்ளை செய்து ஜெயிலுக்கு போனவர். அரசியல் சட்டத்தை தவறாக பயன்படுத்தி படுகொலை செய்தவர். மன்னிக்க முடியாத கொள்ளைக்காரி. அப்படிப்பட்ட ஆத்தாவின் படத்தை தூக்கி கொண்டு திரிகிறாயே? அப்படியானால் ஆத்தா மாதிரி ஊழல் செய்வேன் என்று கூறுவதாக அர்த்தமா? என்று ஆவேசமாக பேசி இருந்தார்.

“உங்காத்தா ஒரு கொள்ளைக்காரி”… ஆ. ராசா மீது டிஜிபி அலுவலகத்தில் அதிமுக புகார்!

இந்நிலையில் முதல்வரை அவதூறாக பேசியதாக சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு புகார் அளித்துள்ளது . அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் செல்வகுமார், கோவிந்தராஜன் புகார் அளித்துள்ளனர்.