இரட்டை இலைக்கு ஓட்டு போடலனா நல்ல சாவே வராது! அதிமுக வேட்பாளர் சாபம்

 

இரட்டை இலைக்கு ஓட்டு போடலனா நல்ல சாவே வராது! அதிமுக வேட்பாளர் சாபம்

சட்டமன்ற தேர்தல் தேதி நெருங்கிவருவதையடுத்து திமுக வேட்பாளர்களும், அதிமுக வேட்பாளர்களும் போட்டிப்போட்டுக்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். குறிப்பாக இரு கட்சியினருடன் ஒருவரை ஒருவர் சாடி கொள்வதுடன், மக்களையும் திட்டிவருகின்றனர்.

நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் இரண்டாவது முறையாக களமிறங்கும் கே.பி.பி பாஸ்கர், மோகனூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “உங்களுக்கு மனசாட்சி என ஒன்று இருந்தா, இரட்டை இலைக்கு ஓட்டு போடலனா நீங்க சத்தியமா நல்ல சாவே சாவமாட்டீங்க, இத்தனை திட்டங்களை அறிவித்த பின்னரும் ஓட்டுப்போடவில்லையெனில் நன்றி மறந்தவங்கள் ஆகிவிடுவீர்கள். நாமக்கல் தொகுதி நன்றி கெட்ட தொகுதி என்ற பெயரை மக்கள் வாங்க வேண்டாம் என்று அன்பு கட்டளையிடுகிறேன்” என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.