1,6,9 மற்றும்11 ஆம் வகுப்புகளுக்கு இந்த தேதிகளில் மாணவர் சேர்க்கை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

 

1,6,9 மற்றும்11 ஆம் வகுப்புகளுக்கு இந்த தேதிகளில் மாணவர் சேர்க்கை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு மேலாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக எந்த பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை இன்னும் தொடங்கப்படவில்லை. இன்று நாடாளுமன்ற கூட்டத்தில் பேசிய உயர்கல்வித்துறை செயலாளர், வரும் டிசம்பர் மாதம் வரை பள்ளி கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்தார். அதனால் எப்போது தான் பள்ளிகள் திறக்கும் என்ற கேள்வி வெகுவாக எழுந்துள்ளது. மேலும் தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

1,6,9 மற்றும்11 ஆம் வகுப்புகளுக்கு இந்த தேதிகளில் மாணவர் சேர்க்கை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

இந்த நிலையில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து அமைச்சர் செங்கோட்டையன் தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், அரசு பள்ளிகளில் 1,6,9 ஆம் வகுப்புகளுக்கு வரும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் 11 ஆம் வகுப்புக்கு ஆகஸ்ட் 24 ஆம் தேதி மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் தெரிவித்தார். சமூக இடைவெளி மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கை பின்பற்றி மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மேலும், பள்ளிகளை திறப்பது குறித்து முதல்வரும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளும் ஆலோசித்து வருவதாகவும் கொரோனா பாதிப்பு குறைந்த பிறகே பள்ளிகள் திறக்கப்படும் என்றும் மாணவர் சேர்க்கை அன்றே மாணவர்களுக்கு இலவச நோட்டுகள் மற்றும் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.