3 மாவட்ட காவல் அதிகாரிகளுடன், ஏ.டி.ஜி.பி ராஜேஷ்தாஸ் ஆலோசனை

 

3 மாவட்ட காவல் அதிகாரிகளுடன், ஏ.டி.ஜி.பி ராஜேஷ்தாஸ் ஆலோசனை

வேலூர், ராணிப்பேட்டை மற்றும் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, தமிழக சட்டம், ஒழுங்கு கூடுதல் இயக்குநர் ராஜேஷ்தாஸ் இன்று ஆலோசனை மேற்கொண்டார். வேலூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் வேலூர் சரக டிஐஜி காமினி, வேலூர் மாவட்ட எஸ்.பி., செல்வகுமார், திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி விஜயகுமார், ராணிப்பேட்டை எஸ்.பி மயில்வாகனன் உள்ளிட்ட 3 மாவட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், பொதுமக்களுக்கு காவல்துறையினரால்
நடைமுறை படுத்தப்படும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும், நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் மனுக்களை விரைந்து முடிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தினார்.

3 மாவட்ட காவல் அதிகாரிகளுடன், ஏ.டி.ஜி.பி ராஜேஷ்தாஸ் ஆலோசனை