கொரோனா பரவலை தடுக்க போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது – தமிழக அரசு

 

கொரோனா பரவலை தடுக்க போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது – தமிழக அரசு

தமிழகத்தில் கொரோனா பரவல் சமூக பரவலாக மாறவில்லை என்றும் பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது என்றும் தமிழக அரசு தெரிவித்தது. இதையடுத்து தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு முடிவுக்கு வந்து கடந்த 1ம் தேதி முதல் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர்.

கொரோனா பரவலை தடுக்க போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது – தமிழக அரசு

இதனிடையே வேலூரை சேர்ந்த ராஜலட்சுமி என்பவர் தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்றும் கொரோனாவை தடுக்க அரசு தவறிவிட்டது என்றும் குற்றஞ்சாட்டினார். மேலும் கொரோனாவை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

கொரோனா பரவலை தடுக்க போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது – தமிழக அரசு

இந்நிலையில் இந்த வழக்கானது நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது அப்போது, கொரோனா பரவலை தடுக்க போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது. தமிழக அரசு விளக்கத்தை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.