ராம்விலாஸ் பஸ்வான் மறைவு; அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கூடுதல் பொறுப்பு!

 

ராம்விலாஸ் பஸ்வான் மறைவு; அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கூடுதல் பொறுப்பு!

மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் மேற்கொண்ட பணிகளை, இனி அமைச்சர் பியூஷ் கோயல் கூடுதலாக கவனிப்பார் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய உணவு மற்றும் நுகர்பொருள்துறை அமைச்சராக இருந்த ராம்விலாஸ் பஸ்வான் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். பீகார் மாநிலத்தின் முக்கிய அரசியல் தலைவர்களுள் பஸ்வானும் ஒருவர். அம்மாநிலத்தின் சட்டப்பேரவை தேர்தல் வரும் 28ம் தேதி நடக்க உள்ள நிலையில், அமைச்சர் பஸ்வான் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ராம்விலாஸ் பஸ்வான் மறைவு; அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கூடுதல் பொறுப்பு!

இந்த நிலையில், ராம்விலாஸ் பஸ்வான் பொறுப்பு வகித்து வந்த நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் பணிகள் அனைத்தையும் அமைச்சர் பியூஷ் கோயல் கவனித்துக் கொள்வார் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் கொடுத்துள்ளார். ஏற்கனவே வர்த்தகம் மற்றும் தொழில்துறை பணிகளை மேற்கொண்டு வரும் அமைச்சர் பியூஷ் கோயல் தற்போது பொது விநியோக அமைச்சக பணிகளையும் கூடுதலாக கவனிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.