உண்மை தெரியாத யாஷிகா! கதறி அழும் தாய்

 

உண்மை தெரியாத யாஷிகா! கதறி அழும் தாய்

கார் விபத்தில் பவானி இறந்ததை யாஷிகாவிடம் இதுவரை கூறவில்லை என்று அவரின் அம்மா சோனல் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

உண்மை தெரியாத யாஷிகா! கதறி அழும் தாய்

பிக்பாஸ் பிரபலமான யாஷிகா, தமிழி இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா, ஜாம்பி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தனது நண்பர்களுடன், சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு காரில் சென்றார். பின்னர் மீண்டும் அன்றைய இரவு 10 மணி அளவில் புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்தபோது மாமல்லபுரம் அருகே இவர்களது கார் திடீரென விபத்துக்குள்ளானது. இதில் யாஷிகாவின் தோழி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், யாஷிகா உள்ளிட்ட 3 பேர் படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்நிலையில் யாஷிகாவின் உடல்நிலை குறித்து அவரது தாய் தொலைபேசி வழியாக பிரபல செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “வலது கால் மற்றும், இடுப்பு பகுதியில் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். யாஷிகாவின் உயிருக்கு எந்த பாதிப்பும் இல்லை. கார் விபத்தில் பவானி இறந்ததை யாஷிகாவிடம் இதுவரை கூறவில்லை. அடிக்கடி தனது தோழி எப்படி இருக்கிறார் என யாஷிகா கேட்டுக்கொண்டே இருக்கிறார். அறுவை சிகிச்சை செய்திருப்பதால் இரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறி, மருத்துவர்கள் தோழி இறந்ததை தெரிவிக்க வேண்டாம் என கூறினர். அதனால் அவரிடம் கூறவில்லை. யாஷிகா 2 மாதத்தில் குணமடைவார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்” என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.