நடிகை யாஷிகா ஆனந்த் விரைவில் கைது?!

 

நடிகை யாஷிகா ஆனந்த் விரைவில் கைது?!

நடிகையும் பிக் பாஸ் பிரபலமுமான யாஷிகா கடந்த 24ஆம் தேதி தனது நண்பர்களுடன் காரில் பயணம் செய்த போது மாமல்லபுரம் அருகே கார் பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் யாஷிகாவின் தோழி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் அத்துடன் யாஷிகா மற்றும் அவருடன் உடன் பயணித்த இரண்டு ஆண் நண்பர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நடிகை யாஷிகா ஆனந்த் விரைவில் கைது?!

யாஷிகா மணிக்கு 140 முதல் 160கிமீ வேகத்தில் கார் ஓட்டிவந்த நிலையில் கார் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் யாஷிகாவின் தோழி பவானி சீட் பெல்ட் அணியாததால் காரிலிருந்து தூக்கி வீசப்பட்டு உயிரிழந்துள்ளார். இதை தொடர்ந்து யாஷிகா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரின் ஓட்டுநர் உரிமத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

நடிகை யாஷிகா ஆனந்த் விரைவில் கைது?!

இந்நிலையில் அதிவேகமாக காரை ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்திய வழக்கில் நடிகை யாஷிகா விரைவில் கைது செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. விபத்து குறித்து விசாரணை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது ஓட்டுநர் உரிமத்தை போலீசார் பறிமுதல் செய்த நிலையில் விரைவில் அவர் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.