“திமுக போகாத ஒரே கடை சாக்கடை தான்” மதுரையை கலக்கிய நடிகை விந்தியா

 

“திமுக போகாத ஒரே கடை சாக்கடை தான்” மதுரையை கலக்கிய நடிகை விந்தியா

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் போட்டியிடும் அமைச்சர் ஆர் .பி உதயகுமாரை ஆதரித்து நடிகை விந்தியா என்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், எனக்கு ஜல்லிக்கட்டு என்றால் பிடிக்கும் ஏனென்றால் அதில் பங்கு பெறுவது திமுக போன்ற பூம்பூம் மாடுகள் கிடையாது. அதிமுக போன்ற கொம்பு வைத்த சிங்கங்கள். அதனால் அதை பார்ப்பதற்காக நான் டிவி பார்த்தேன். அப்போது 2 பேர் அதில் உட்கார்ந்திருந்தார்கள். அது யார் தெரியுமா விவரம் கேட்ட ராகுல் காந்தி, விவஸ்தை கெட்ட உதயநிதியும் தான் வேடிக்கை பார்க்க வந்திருந்தனர். திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு ஜல்லிக்கட்டுக்கு தடை கொண்டு வரப்பட்டது.அப்போது முதல்வராக இருந்த ஓபிஎஸ் அதற்கு மீண்டும் அனுமதி வாங்கிக் கொடுத்தார் ” என்றார்.

“திமுக போகாத ஒரே கடை சாக்கடை தான்” மதுரையை கலக்கிய நடிகை விந்தியா

தொடர்ந்து பேசிய அவர், திமுகவினர் ஒவ்வொரு கடைகளுக்கும் சென்று கல்லாப் பெட்டியை தூக்கிக்கொண்டு செல்வர். அவர்களின் அராஜகம் தாங்காது. திமுக போகாத ஒரே கடை சாக்கடை தான். இப்போது புதிதாக விளம்பர பாட்டு ஒன்னு வைத்துள்ளார்கள் ஸ்டாலின்தான் வராரு விடியல் தரப்போறாருன்னு.. உண்மையை சொல்றவன் ஒருத்தன் எழுதி இருந்தால்
“ஸ்டாலின்தான் வராரு மக்களெல்லாம் உஷாரு திமுக ஆட்சிக்கு வந்தால் பேஜாரு, பிரியாணி கடை ஆடிப்பாரு பியூட்டி பார்லர் உள்ள உதைப்பார் செல்பி எடுத்தால் பளாரென்று விடுவார், பிள்ளையை மட்டும் வளர்ப்பார் உண்மை தொண்டரை உதைப்பார் இதுதான் அவருடைய வரலாறு” அப்படின்னு எழுதி இருப்பான்.அதிமுகவினர் சொன்னதையெல்லாம் செய்வார்கள் . ஆனால் வாயை வைத்து வாழ்ந்தவர் கருணாநிதி.

“திமுக போகாத ஒரே கடை சாக்கடை தான்” மதுரையை கலக்கிய நடிகை விந்தியா

ஆனால் இரண்டு விரலை மட்டும் காட்டி நமக்கு நன்மையை சேர்த்தவர் புரட்சித் தலைவரும் புரட்சித் தலைவியும். நாங்கள் திமுகவை குறை சொல்லி மட்டும் ஓட்டு கேட்க மாட்டோம் ;எங்களுடைய சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்போம். பிணம் தின்னி கழுகுபோல திமுக காத்திருக்கிறது. ஆர்.பி. உதயகுமார் மாதிரி ஒரு ஆளை திமுகவில் காட்டுங்கள் பார்ப்போம். திமுகவுக்கு ஓட்டு போடும் முன் சிந்தியுங்கள் …எடப்பாடி பழனிசாமி ஆட்சியா? அராஜகம் செய்யும் ஸ்டாலின் ஆட்சியா? என்று யோசித்து வாக்களியுங்கள்” என்று அதிரடி பேசினார்.