‘வாடகை தரவில்லை’ எனக்கூறி நடிகை விஜயலட்சுமி மீது போலீசில் புகார்!

 

‘வாடகை  தரவில்லை’ எனக்கூறி நடிகை விஜயலட்சுமி மீது போலீசில் புகார்!

நடிகை விஜயலட்சுமி மீது திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

‘வாடகை  தரவில்லை’ எனக்கூறி நடிகை விஜயலட்சுமி மீது போலீசில் புகார்!

தமிழில் விஜய், சூர்யா இணைந்து நடித்த பிரெண்ட்ஸ் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை விஜயலட்சுமி. இதையடுத்து ஆர்யாவின் பாஸ் என்கிற பாஸ்கரன், மீசைய முறுக்கு போன்ற சில படங்களில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து பட வாய்ப்புகள் சரிவர இல்லாததால் சின்னதிரையில் நடித்து வந்தார். இவர் சீமான் இயக்கிய ‘வாழ்த்துகள்’ படத்திலும் நடித்திருந்தார். அப்போது சீமான் தன்னை 3 ஆண்டுகளாக காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுப்பதாக குற்றம் சாட்டியிருந்தார்.

‘வாடகை  தரவில்லை’ எனக்கூறி நடிகை விஜயலட்சுமி மீது போலீசில் புகார்!

இந்நிலையில் சென்னை திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள தங்கும் விடுதியில் நடிகை விஜயலட்சுமி தனது தாயுடன் கடந்த 6 மாத காலமாக தங்கை வந்துள்ளார். இதற்கான வாடகை தொகை ரூ.5 லட்சத்தை எட்டியுள்ளது. இதில் ரூ.2 லட்சத்தை மட்டுமே கொடுத்துள்ளார். வேறு பணமில்லை. பணம் வந்ததுடன் தருகிறேன் என்று கூறி அறையை காலிசெய்ய மறுப்பதாக விடுதி உரிமையாளர் சமீர் புகார் அளித்துள்ளார். இதையடுத்து விரைவில் வாடகை பணத்தை தருவதாக நடிகை விஜயலட்சுமி உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது.