‘கன்னட திரையுலகை உலுக்கிய போதைப்பொருள் வழக்கு’: நடிகை சஞ்சனா கல்ராணிக்கு ஜாமீன்!

 

‘கன்னட திரையுலகை உலுக்கிய போதைப்பொருள் வழக்கு’: நடிகை சஞ்சனா கல்ராணிக்கு ஜாமீன்!

போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகை சஞ்சனா கல்ராணிக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

‘கன்னட திரையுலகை உலுக்கிய போதைப்பொருள் வழக்கு’: நடிகை சஞ்சனா கல்ராணிக்கு ஜாமீன்!

போதைப்பொருள் வழக்கில் தொடர்ச்சியாக திரையுலகை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். பெங்களூருவில் போதைப்பொருள் விற்றதற்காகவும் கன்னட திரையுலகில் போதைப்பொருள் பயன்படுத்தியதற்காகவும் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கடந்த செப்.8ம் தேதி கைது செய்யப்பட்டு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்ட சஞ்சனா கல்ராணிக்கு, போதைப்பொருள் டீலர்களுடன் நேரடி தொடர்பு இருந்தது அம்பலமானது.

‘கன்னட திரையுலகை உலுக்கிய போதைப்பொருள் வழக்கு’: நடிகை சஞ்சனா கல்ராணிக்கு ஜாமீன்!

இதைத் தொடர்ந்து, ராகிணி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி ஆகியோருக்கு சம்பந்தப்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மருத்துவக் காரணங்களை முன் வைத்து ஜாமீனில் விடுவிக்கக் கோரிய சஞ்சனாவின் மனு இன்று கர்நாடகா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணைக்கு அழைக்கும் போது தவறாமல் நேரில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் சஞ்சனாவுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.