கிஷோர் கே சுவாமி மீது நடிகை ரோகிணி புகார்!

 

கிஷோர் கே சுவாமி மீது நடிகை ரோகிணி புகார்!

கிஷோர் கே சுவாமி மீது நடிகை ரோகிணி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

கிஷோர் கே சுவாமி மீது நடிகை ரோகிணி புகார்!

முன்னாள் முதல்வர்கள் அண்ணா ,கருணாநிதி, தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாகப் பதிவிட்ட கிஷோர் கே சாமி சமீபத்தில் சென்னையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.திமுக தகவல் தொழில் நுட்ப காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிசந்திரன் பம்மல் சங்கர் நகர் போலீசில் அளித்த புகாரில் கிஷோர் கே சாமி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். அத்துடன் பெண் பத்திரிக்கையாளர் குறித்து சமூக வலைதளத்தில் இழிபடுத்தி பேசிய வழக்கில் கிஷோர் கே சுவாமி மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிஷோர் கே சுவாமி மீது நடிகை ரோகிணி புகார்!

இந்நிலையில் கிஷோர் கே சுவாமி மீது நடிகை ரோகிணி ஆன்லைன் மூலம் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். தன்னைப் பற்றியும், மறைந்த கணவர் ரகுவரனை பற்றியும் வலைத்தளத்தில் அவதூறாக கருத்து பதிவு செய்துள்ளதாக புகார் கூறியுள்ளார். ஏற்கனவே முன்னாள் முதல்வர்கள், பெண் நிருபர்களை அவதூறாக பேசிய விவகாரத்தில் ஏற்கனவே கிஷோர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.