மக்களை கொடுமை செய்துவிட்டு மீனாட்சி தரிசனமா? நடிகை ரோகிணி விளாசல்!!

 

மக்களை கொடுமை செய்துவிட்டு மீனாட்சி தரிசனமா? நடிகை ரோகிணி விளாசல்!!

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பாவை எதிர்த்து திமுக கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பொன்னுத்தாயி களம் காண்கிறார். இவருக்கு ஆதரவாக நடிகை ரோகிணி கடந்த சில நாட்களாக பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

மக்களை கொடுமை செய்துவிட்டு மீனாட்சி தரிசனமா? நடிகை ரோகிணி விளாசல்!!

அந்த வகையில் நேற்று பிரச்சாரத்தில் கலந்து கொண்ட அவர், ” குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வந்து பாஜக அரசு மக்களை கொடுமைப்படுத்தி வருகிறது. மக்களை வதைக்கும் திட்டங்களை கொண்டு வந்துவிட்டு மதுரை மீனாட்சி அம்மனை கும்பிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா? பாஜக திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு எதிராக உள்ளது. அது அடுத்த தலைமுறையினருக்கும் ஆபத்தை தான் விளைவிக்கும்” என்றார்.

மக்களை கொடுமை செய்துவிட்டு மீனாட்சி தரிசனமா? நடிகை ரோகிணி விளாசல்!!

தொடர்ந்து பேசிய அவர், “கேஸ் விலை ஏறிவிட்டது. அதை கட்டுப்படுத்த முடியாமல் தற்போது ஆறு சிலிண்டர் தருவதாக சொல்கிறார்கள். அந்த சிலிண்டரில் கேஸ் இருக்குமோ இருக்காதோ யார் கண்டது?உத்தரபிரதேசத்தில் பட்டியலின பெண் குழந்தை கொலைக்கு பதில் சொல்லவில்லை, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக்கு நடவடிக்கை எடுக்கவில்லை, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்களை சுட்டுக் கொன்றனர். நம் பிள்ளைகள் மருத்துவ படிப்புகளில் சேர கூடாது என நுழைவு தேர்வு, அதை தாண்டி நம் பிள்ளைகள் படித்து வந்தாலும் வடமாநில மக்களுக்குதான் வேலையில் முன்னுரிமை. இதனால் மக்கள் விரோத ஆட்சிக்கு நாம் முடிவு கட்டவேண்டும்”என்றார்.