‘வீங்கிய முகம்’ நடிகை ரைசா ரூ.1 கோடி கேட்டு வக்கீல் நோட்டீஸ்!

 

‘வீங்கிய முகம்’ நடிகை ரைசா ரூ.1 கோடி கேட்டு வக்கீல் நோட்டீஸ்!

தவறான முகப்பொலிவு சிகிச்சை அளித்ததால் ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை ரைசா வில்சன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

‘வீங்கிய முகம்’ நடிகை ரைசா ரூ.1 கோடி கேட்டு வக்கீல் நோட்டீஸ்!

மாடல் அழகியும், பிக் பாஸ் சீசன் ஒன்றில் கலந்து கொண்ட போட்டியாளரும் நடிகை ரைசா வில்சன் தற்போது கோலிவுட்டில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளார். பியார் பிரேமா காதல் படத்தில் நடிகர் ஹரீஷ் கல்யாண் உடன் ஜோடி சேர்ந்த இவர் தற்போது காதலிக்க யாருமில்லை உள்ளிட்ட சில படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். முகத்தை எப்போதும் அழகாக வைத்துக் கொள்வதில் மிகவும் ஆர்வம் கொண்டவராக அறியப்பட்ட ரைசா வில்சன், சமீபத்தில் தோல் மருத்துவர் பைரவி மீது பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்திருந்தார். அதில் மருத்துவர் பைரவி முகப்பொலிவுக்கு செய்த தவறான சிகிச்சையால் தனது முகம் வீங்கி விட்டதாகவும் இதுகுறித்து மருத்துவரை தொடர்பு கொண்டு முயன்றபோது அவர் வெளியூர் சென்று விட்டதாக அலட்சியமாக சொல்லப்பட்டதாகவும் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்த விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியது.

‘வீங்கிய முகம்’ நடிகை ரைசா ரூ.1 கோடி கேட்டு வக்கீல் நோட்டீஸ்!

காரணம் பல திரைப்பிரபலங்கள் மற்றும் பாடகர்கள் என பலர் டாக்டர் பைரவி செந்திலை நாடி தங்கள் முகப்பொலிவை அதிகரித்து வருகின்றனர். இந்த சூழலில் டிராக்டர் பைரவி மீது ரைசா வில்சன் கொடுத்த புகார் திரைத்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.ஆனால் dermal fillers சிகிச்சையை எடுத்துக் கொண்டால் ஒரு வாரத்துக்கு முகம் வீக்கமாக தான் இருக்கும். இதை பயன்படுத்தி ரைசா என்னிடம் பணம் கேட்டு மிரட்டுகிறார் என்று டாக்டர் பைரவி செந்தில் நடிகை ரைசா மீது பதில் குற்றச்சாட்டை வைத்தார்.

‘வீங்கிய முகம்’ நடிகை ரைசா ரூ.1 கோடி கேட்டு வக்கீல் நோட்டீஸ்!

இந்நிலையில் ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை ரைசா வில்சன் மருத்துவர் பைரவிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். முகப்பொலிவு சிகிச்சையை தவறாக செய்துள்ளதாக கூறி மருத்துவர் பைரவி செந்திலிடம் நஷ்ட ஈடு கேட்டுள்ளதாக நடிகை ரைசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.1.27 லட்சம் செலுத்தி சிகிச்சை எடுத்தும் முகப்பொலிவு பெறாமல் ரத்த கசிவு ,வீக்கம் தான் ஏற்பட்டது,உதவி மருத்துவர் அளித்த சிகிச்சையில் முன்னேற்றம் இல்லாத நிலையில் பைரவி அளித்த சிகிச்சையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 15 நாளில் இழப்பீடு தராவிடில் சிவில், கிரிமினல் வழக்கு தொடரப்படும் என நடிகை ரைசா வில்சன் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.