நடிகை பூர்ணாவை மிரட்டி பணம் பறிக்க முயன்ற வழக்கில் மேலும் இருவர் கைது!

 

நடிகை பூர்ணாவை மிரட்டி பணம் பறிக்க முயன்ற வழக்கில் மேலும் இருவர் கைது!

நடிகை பூர்ணாவை மிரட்டி பணம் பறிக்க முயன்ற வழக்கில் கோவையை சேர்ந்த 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேரளாவில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ”சூப்பர் டான்சர்” நிகழ்ச்சி மூலம் அறிமுகமான பூர்ணா. பின்னர் மலையாள சினிமாவில் சிறு சிறு வேடங்கள் ஏற்று நடிகையான பூர்ணா, தமிழில் ”முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு” படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். பின்னர், கந்தக்கோட்டை, ஆடு புலி, வித்தகன், கொடிவீரன், காப்பான் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இவர், தலைவி என்ற பெயரிலான மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட, மும்மொழியில் தயாராகும் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். தெலுங்கிலும் நடிகை பூர்ணா 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

நடிகை பூர்ணாவை மிரட்டி பணம் பறிக்க முயன்ற வழக்கில் மேலும் இருவர் கைது!

இந்நிலையில் கடந்த மாதம் கொச்சியில் உள்ள பூர்ணாவின் வீட்டுக்கு வந்த 4 பேர் பூர்ணாவை துபாய் தொழிலதிபர் ஒருவர் பெண் பார்க்க வருவதாக கூறி, பணம் கேட்டுள்ளனர். இதில் சந்தேகம் அடைந்த பூர்ணா கொச்சி மரடு காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திவந்த காவல்துறையினர் கோவையைச் சேர்ந்த நசீப் ராஜா மற்றும் ஜாபர் சாதிக் ஆகியோரை கைது செய்துள்ளனர். இத்துடன் நடிகை பூர்ணாவை மிரட்டிய சம்பவத்தில் கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.