மோடி அரசே! என்னை கைது செய் – நடிகை ஓவியா சவால்

 

மோடி அரசே! என்னை கைது செய் –  நடிகை ஓவியா சவால்

இந்தியா முழுவதுமே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள சூழலில் கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி போடுவது அவசியம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றன. ஆனால் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நாடு முழுவதும் அதிகமாக உள்ளது

மோடி அரசே! என்னை கைது செய் –  நடிகை ஓவியா சவால்

நம் நாட்டில் உள்ள குழந்தைகளுக்கு தேவைப்படற தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஏன் செஞ்சீங்கய்யா? அப்படீன்னு பிரதமர் மோடியை விமர்சிக்கும் வகையில், டெல்லியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. உடனே இது குறித்து பல காவல் நிலையங்களில் புகார் செய்யப்பட்டு அந்த போஸ்டர்களை ஒட்டிய 20 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதை அடுத்து #ArrestMetoo என்ற ஹேஷ்டேக்-கில் ராகுல் காந்தி ட்வீட் செய்திருந்தார். இந்நிலையில் நடிகை ஓவியாவும் இது ஜனநாயகமா எனக் கேள்வி எழுப்பி #ArrestMetoo ஹேஷ்டேக் போட்டு பதிவிட்டார்.