“தெய்வீகக் குரல் இனி இல்லை என்பதை நினைக்கும் போதே நெஞ்சம் பதறுகிறது” : நடிகை நயன்தாரா இரங்கல்!

 

“தெய்வீகக் குரல் இனி இல்லை என்பதை நினைக்கும் போதே நெஞ்சம் பதறுகிறது” : நடிகை நயன்தாரா இரங்கல்!

மறைந்த பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் மறைவுக்கு நடிகை நயன்தாரா இரங்கல் தெரிவித்துள்ளார்.

“தெய்வீகக் குரல் இனி இல்லை என்பதை நினைக்கும் போதே நெஞ்சம் பதறுகிறது” : நடிகை நயன்தாரா இரங்கல்!

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “தெய்வீகக் குரல் இனி இல்லை என்பதை நினைக்கும் போதே நெஞ்சம் பதறுகிறது. தலைமுறைகளைத் தாண்டி நம்மை மகிழ்வித்த திரு.எஸ். பி பாலசுப்ரமணியம் சாருடைய குரல், நம்முடைய எல்லா காலங்களுக்கும் ,காரணங்களும் பொருந்தியிருக்கும்.

“தெய்வீகக் குரல் இனி இல்லை என்பதை நினைக்கும் போதே நெஞ்சம் பதறுகிறது” : நடிகை நயன்தாரா இரங்கல்!

நீங்கள் இனி இல்லை என்பதை மனம் நம்ப மறுக்கிறது. ஆயினும் உங்கள் குரல் என்றென்றும் நீங்கா புகழுடன் இருக்கும் . உங்களுக்கு அஞ்சலி செலுத்தி எங்களுக்கு நாங்களே ஆறுதல் சொல்லிக் கொள்ளும் இந்த நேரத்தில் கூட உங்கள் பாடல் மட்டுமே பொருந்துகிறது. எங்கள் வாழ்க்கையில் உங்களின் ஆளுமை அப்படி… நீண்ட காலமாக இடைவிடாமல் உழைத்து எங்களை மகிழ்வித்த உங்களுக்கு மனமில்லாமல் பிரியாவிடை கொடுக்கிறோம். பாடும் நிலா விண்ணிலிருந்து பாடட்டும். உங்களைப் பிரிந்து வாடும் உங்கள் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் ,உங்கள் திரைஉலக சகாக்களுக்கும், உலகமெங்கும் பரவியிருக்கும் உங்கள் எண்ணற்ற ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த ஆறுதல் செய்தி இது” என்று கூறியுள்ளார்.