மகனைக் காப்பாற்றிவிட்டு உயிரிழந்த நடிகை… மாயமான நடிகை உடல் மீட்பு!

 

மகனைக் காப்பாற்றிவிட்டு உயிரிழந்த நடிகை… மாயமான நடிகை உடல் மீட்பு!

கலிஃபோர்னியாவில் ஏரியில் மூழ்கிய “க்ளீ” நடிகை நயா ரிவேராவின் சடலத்தை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

தனது 4 வயது மகனுடன் படகு சவாரிக்கு சென்ற ரிவேரா நீண்ட நேரம் ஆகியும் திரும்பவில்லை. சந்தேகம் அடைந்த பரமாரிப்பாளர்கள் மற்றொரு படகில் சென்று பார்த்தனர். நடு ஏரியில் படகு மட்டும் இருந்தது. ஆனால், ரிவேராவைப் படகில் காணவில்லை. படகில் அவர் மகன் மட்டுமே இருந்துள்ளான். நயா ரிவேராவுக்கான லைஃப் ஜாக்கெட்டும் படகில் அப்படியே இருந்துள்ளது. அவர் மகன் படகில் உடலில் கவச உடை அணிந்தபடி தூங்கியபடி இருந்துள்ளான். இதையடுத்து போலீசாரும் மீட்பு படையினரும் நயா ரிவேராவைத் தேடி வந்தனர். பின்பு அவரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது. தற்போது அவர் தற்செயலாக நீரில் மூழ்கிவிட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

மகனைக் காப்பாற்றிவிட்டு உயிரிழந்த நடிகை… மாயமான நடிகை உடல் மீட்பு!

ரிவேராவின் உடல் மீட்கப்பட்டதையடுத்து ஆரம்ப பரிசோதனையில் துன்புறுத்தல் அல்லது தற்கொலைக்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  “நாங்கள் கண்டறிந்த உடல் நயா ரிவேராவின் உடல் என்று நம்புகிறோம்” என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.ஆறு நாட்களுக்குப் பிறகு நயா ரிவேராவின் உடல் நேற்று மீட்கப்பட்டுள்ளது. 35 முதல் 60 அடி ஆழம் உள்ள எரிப்பகுதியில் நயாவின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மகனைக் காப்பாற்றிவிட்டு உயிரிழந்த நடிகை… மாயமான நடிகை உடல் மீட்பு!

நயாவும் தனது மகனுடன் அந்தப் பகுதியில் நீந்தியுள்ளார். பின்னர் மகனை படகில் ஏற்றியதாகவும், அவர் ஏற முயன்றபோது, நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் படகு நகன்று சென்றதால் அவர் நீருக்குள் மூழ்கியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

நடிகை ரிவேரா, க்ளீ (Glee) என்ற தொடரில் நடித்ததன் மூலம் அதிகம் பிரபலமானவர். ரிவேரா மறைவிற்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.