“சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி ஆபாச படத்தில் நடிக்க வைத்தார்” -பிரபல பாலிவுட் நடிகை கைது .

 

“சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி ஆபாச படத்தில் நடிக்க வைத்தார்” -பிரபல பாலிவுட் நடிகை கைது .

ஆபாச படமெடுத்த வழக்கில் பிரபல பாலிவுட் நடிகை கெஹானா வசிஸ்த் மும்பை போலீசால் கைது செய்யப்பட்டார் .

“சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி ஆபாச படத்தில் நடிக்க வைத்தார்” -பிரபல பாலிவுட் நடிகை கைது .


பிரபல பாலிவுட் நடிகை மாடல் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார். அவர் ஒரு மாடலாக பல விளம்பரங்களில் நடித்த பிறகு, அவர் ‘மிஸ் ஆசியா பிகினி’ என முடிசூட்டப்பட்டார். அவர் 80 க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்துள்ளார் . பின்னர் அவர் ஃபிலிமி துனியா என்ற ஹிந்தி படத்திலும் பல தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார் .
இவர் இப்போது தான் எடுக்க இருக்கும் இந்தி படத்தில் நடிக்க புதுமுக நடிகர் நடிகை தேவையென்று விளம்பரம் கொடுத்துள்ளார் .அதை பார்த்து விட்டு அவரை தேடி வந்த பல பெண்களை அவர் ஆபாச படமெ டுத்து அதை இணையத்திலும் ,ஆப் மூலமும் வெளியிட்டு லட்ச்சக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளார் .அவரின் இந்த பலான படங்களை பார்க்க 2000 ரூபாய் சந்தா வசூல் செய்துள்ளார் .இது பற்றி தகவலறிந்த
போலீசார் மலாட்டில் உள்ள மத் தீவில் உள்ள கிரீன் பார்க் பங்களாவில் வியாழக்கிழமை சோதனை நடத்தினர் .அப்போது நடந்த சோதனையில், நடிகை கெஹானா வசிஸ்த்துடன் அவரின் குழுவை சேர்ந்த யாஸ்மின் பெக் கான் , பிரதிபா நலாவடே, மோனு கோபால்தாஸ் ஜோஷி, பானுஸ்யூரியம் தாக்கூர் மற்றும் முகமது அலி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த சோதனையின்போது சிக்கிய பெண்கள் மீட்கப்பட்டு மறுவாழ்வுக்காக அனுப்பப்பட்டுள்ளார்கள் . பிறகு காவல்துறையினர் அவர்களின் மூன்று வங்கிக் கணக்குகளில் இருந்த 36 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தார்கள்
மேலும் அவர்களிடமிருந்து ஒரு வீடியோ கேமரா, ஆறு மொபைல் போன்கள், ஒரு லேப்டாப், ஸ்பாட்லைட்கள், ஒரு கேமரா ஸ்டாண்ட், வீடியோ கிளிப்புகள் மற்றும் மெமரி கார்டு ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

“சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி ஆபாச படத்தில் நடிக்க வைத்தார்” -பிரபல பாலிவுட் நடிகை கைது .