ஆபாச பேச்சு : நடிகை மீரா மிதுன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

 

ஆபாச பேச்சு : நடிகை மீரா மிதுன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

ஆபாசமாகப் பேசியதாக நடிகை மீரா மிதுன் மீது 5 பிரிவுகளில் சென்னை எஸ்கேபி நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆபாச பேச்சு : நடிகை மீரா மிதுன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

அழகி போட்டி நடத்தும் நிறுவன உரிமையாளர் ஜோ மைக்கேல் பிரவீன் புகாரின் பேரில் 5 பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளது . பொது இடங்களில் ஆபாசமாகப் பேசுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகை மீரா மீது நடவடிக்கை எடுக்க ஏற்கனவே நடிகைகள் சனம் ஷெட்டி, ஷாலு ஷம்மு ஆகியோர் புகாரளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆபாச பேச்சு : நடிகை மீரா மிதுன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

நடிகையும் மாடல் அழகியுமான மீரா சர்ச்சையில் சிக்குவது இது முதல்முறையல்ல. சமீபத்தில் சூர்யா, விஜய் குறித்து அவர் பேசிய கருத்துக்கள் கடுமையான எதிர்ப்பை சந்தித்தது. வீண் விளம்பரத்திற்காக மீரா மிதுன் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக சமூக வலைதளங்களில் பொதுவான விமர்சனம் உள்ளது.