எனக்கு இரங்கல் கடிதம் எழுத சிலர் காத்திருந்தனர்! ஆனால் பிழைத்துக்கொண்டேன் – நடிகை குஷ்பு

 

எனக்கு இரங்கல் கடிதம் எழுத சிலர் காத்திருந்தனர்! ஆனால் பிழைத்துக்கொண்டேன் – நடிகை குஷ்பு

கடலூரில் பாஜக சார்பில் நேற்று வேல் யாத்திரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் கலந்துகொள்வதற்காக நடிகை குஷ்பு சென்னையில் இருந்து கடலூருக்குகாரில் புறப்பட்டு சென்றார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அய்யனார் கோவில் என்ற இடத்தில் சென்றுக்கொண்டிருக்கும்போது குஷ்புவின் கார் கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. ஆனால் குஷ்பு அதிர்ஷ்டவசமாக காயங்களின்றி உயிர் தப்பினார். விபத்துக்குறித்து குஷ்புவின் கார் ஓட்டுநரான முருகனை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

எனக்கு இரங்கல் கடிதம் எழுத சிலர் காத்திருந்தனர்! ஆனால் பிழைத்துக்கொண்டேன் – நடிகை குஷ்பு

இந்நிலையில் நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், “எனக்கு இரங்கல் கடிதம் எழுத காத்திருந்த சிலருக்கு நான் மீண்டும் உயிருடன் வந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கோடிக்கணக்கானோரின் காதலால் நான் விபத்தில் இருந்து தப்பித்தேன். என் குடும்பத்தினரும், நண்பர்களும் என்னுடன் இருக்கிறார்கள். கடவுளின் ஆசீர்வாதம் எனக்கு எப்போது இருக்கிறது. நான் ஆசீர்வதிக்கப்பட்டவள். அடுத்த முறை அதிர்ஷ்டத்தை தேடுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.