வேளாண் சட்ட மசோதாவிற்கு நான் கியாரண்டி! பாஜகவை கண்ணை மூடிகொண்டு நம்பலாம்- குஷ்பு

 

வேளாண் சட்ட மசோதாவிற்கு நான் கியாரண்டி! பாஜகவை கண்ணை மூடிகொண்டு நம்பலாம்- குஷ்பு

வேளாண் சட்ட மசோதாவிற்கு நான் கியாரண்டி நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே மாங்குளம் கிராமத்தில் மத்திய அரசின் வேளாண் மசோதாவிற்கு ஆதரவாக பா.ஜ.க மாநில செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு விவசாயிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து பேசினார். கூட்டத்தில் உரையாற்றி குஷ்பு, “இந்த வேளாண் மசோதா விவசாயிகளை பாதுகாக்கும் மசோதா வேளாண் மசோதாவிற்கு எதிராக எதிர்கட்சிகள் விவசாயிகளை தூண்டிவிடுகின்றனர். பயப்படுபவர்களே விவசாயிகளை தூண்டிவிடுகின்றனர்.

வேளாண் சட்ட மசோதாவிற்கு நான் கியாரண்டி! பாஜகவை கண்ணை மூடிகொண்டு நம்பலாம்- குஷ்பு

இந்த வேளாண் மசோதாவிற்கு நான் கியாராண்டி. நீங்கள் கண்ணை மூடிகொண்டு பா.ஜ.கவை நம்பலாம். இந்த மசோதா மூலம் அம்பானியும், அதானியும் பயனடைவார்கள் என்பது தவறானது. தமிழ் மொழிக்கு பாரத பிரதமர் முக்கியம் கொடுக்கின்றார். வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழகம் வந்து மோடி தூய தமிழில் உங்களிடம் பேசி பரப்புரை செய்வார். திமுக தலைவர் ஸ்டாலின் , காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு நான் தற்போது கூறிக்கொள்வது வேளாண் மசோதாவால் விவசாயிகளுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என நிரூபித்தால் நான் தற்போது கடிதத்தில் எழுதி தருகிறேன் உண்மையிலேயே நிரூபித்துவிட்டால் இப்படியே அரசியலை விட்டு விலகிக் கொள்கிறேன்” எனக் கூறினார்.