போராட்டத்தில் பங்கேற்க சென்ற நடிகை குஷ்பு கைது!

 

போராட்டத்தில் பங்கேற்க சென்ற நடிகை குஷ்பு கைது!

திருமாவளவனை கண்டித்து நடக்கவிருக்கும் போராட்டத்தில் பங்கேற்க சென்ற நடிகை குஷ்புவை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த செப். மாதம் மனு ஸ்மிருதி நூல் குறித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேசிய வீடியோ ஒன்று வைரல் ஆனது. அந்த வீடியோவில் அவர் பெண்களை இழிவு படுத்தி பேசியிருப்பதாக, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் தான் பெண்களை இழிவு படுத்தவில்லை, மனு ஸ்மிருதியில் இருப்பதை தான் கூறினேன் என திருமாவளவன் விளக்கம் அளித்தார். இருப்பினும், அந்த வீடியோவிற்கு பாஜகவினர் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

போராட்டத்தில் பங்கேற்க சென்ற நடிகை குஷ்பு கைது!

இதை அடுத்து, திருமாவளவன் எம்.பி-யாக இருக்கும் சிதம்பரம் தொகுதியில் அவருக்கு எதிராக பாஜக மகளிரணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. இது, சட்டம் ஒழுங்குப் பிரச்னைக்கு வழிவகுக்கும் என்பதால் காவல் துறை ஆர்ப்பாட்டத்துக்கு தடை விதித்தது.

இந்த நிலையில், தடையை மீறி போராட்டத்தில் பங்கேற்க காரில் சிதம்பரம் புறப்பட்டு சென்ற குஷ்புவை போலீசார் முட்டுக்காடு அருகே கைது செய்துள்ளனர். மாமல்லபுரம் ஏஎஸ்பி சுந்தரவதனம் தலைமையிலான போலீஸ் குஷ்புவை கைது செய்த நிலையில், அவர் போலீஸ் வேனில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.