பிரச்சாரத்தால் டல்லான குஷ்பு…பளபளப்பாக மாற செஞ்ச வேலை இதுதான்…!

 

பிரச்சாரத்தால் டல்லான குஷ்பு…பளபளப்பாக மாற செஞ்ச வேலை இதுதான்…!

ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜகவின் வேட்பாளராக களமிறங்கியுள்ளார் நடிகை குஷ்பு. 2010ஆம் ஆண்டு திமுகவில் இணைந்த நடிகை குஷ்பு 2014-இல் அக்கட்சியை விட்டு விலகி விலகினார் . 2014 ஆம் ஆண்டு திமுகவுடன் கூட்டணி அமைத்திருந்த காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த அவர் கடந்த 6ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் தனது பணியை செய்து வந்தார்.

பிரச்சாரத்தால் டல்லான குஷ்பு…பளபளப்பாக மாற செஞ்ச வேலை இதுதான்…!

இதையடுத்து தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் மற்றும் நிர்வாகிகள் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நடிகை குஷ்பு திடீரென கடந்த அக்டோபர் மாதம் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

பிரச்சாரத்தால் டல்லான குஷ்பு…பளபளப்பாக மாற செஞ்ச வேலை இதுதான்…!

கடந்த 10 ஆண்டுகளாக அரசியலில் ஈடுபட்டு வரும் குஷ்புக்கு முதல்முறையாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கிடைத்தது. இதனால் தீவிர பரப்புரையில் ஈடுபட்டார். நேற்று தமிழக சட்டமன்ற தேர்தல் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில் தமிழக அரசியல் களம் சற்று ஓய்வை சந்தித்துள்ளது

இந்நிலையில் நடிகையும் பாஜக ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளருமான குஷ்பு, “தேர்தல் முடிந்து விட்டது. தன்னை பார்த்து கொள்ளும் நேரம். சுவற்றில் உள்ள பெயிண்டை சுரண்டி எடுக்க பேஸ் மாஸ்க் தான் சிறந்தது என்று கிண்டலாக குறிப்பிட்டுள்ளார். அதாவது தேர்தல் காலகட்டத்தில் கொளுத்தும் வெளியிலும் வீதிவீதியாக சென்று குஷ்பு பிரச்சாரம் செய்தார். இதனால் தனது நிறம் மாறிவிட்டது என்பதையே அவர் ஜாலியாக குறிப்பிட்டுள்ளார்.