விஜய் திமுகவுக்கு ஓட்டு போட்டாரா? : குஷ்பு ஆவேசம்!

 

விஜய் திமுகவுக்கு ஓட்டு போட்டாரா? : குஷ்பு ஆவேசம்!

நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தது குறித்து பாஜக வேட்பாளரும் நடிகையுமான குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார்.

விஜய் திமுகவுக்கு ஓட்டு போட்டாரா? : குஷ்பு ஆவேசம்!

தமிழக சட்டமன்ற தேர்தல் இன்று காலை 7 மணிமுதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை முதலே சாமானியர்கள் முதல் அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் தங்கள் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய் வாக்களிப்பதற்காகச் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வந்து தனது வாக்கினை செலுத்தினார்.விஜய் சைக்கிளில் வந்த புகைப்படங்கள் இணையத்தில் பரவ தொடங்கியதுடன் ஏராளமான மீம்ஸ் வெளியாக தொடங்கியது. அதாவது ஆவர் பெட்ரோல் விலை ஏற்றத்தை கண்டித்து சைக்கிளில் வந்ததாகவும், கருப்பு, சிவப்பு சைக்கிளில் வந்ததால் அவர் திமுகவுக்கு ஆதரவு என்றும் சமூக வலைதளங்களில் கருத்துகள் உலவின.

விஜய் திமுகவுக்கு ஓட்டு போட்டாரா? : குஷ்பு ஆவேசம்!

இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகை குஷ்பு, “விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்ததை சிலர் அரசியல் ஆக்க முயற்சி செய்கிறார்கள். வாக்குச்சாவடி மையம் வீட்டின் அருகே இருப்பதால் சைக்கிளில் வந்துள்ளார் விஜய்” என்று தெரிவித்துள்ளார்.தொடர்ந்து பேசிய அவர், “திமுகவைச் சேர்ந்தவர்கள் வாக்காளர்களுக்கு பணத்தை விநியோகிப்பதைக் கண்டோம். அதனால் நாங்கள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளோம். தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன் ” என்றார்.