“செருப்பால் அடித்து, முந்தானையை பிடித்து இழுத்து…” சுந்தர்.சி வேதனை!

 

“செருப்பால் அடித்து, முந்தானையை பிடித்து இழுத்து…” சுந்தர்.சி வேதனை!

குஷ்பு தாக்கப்பட்டது என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று என்று சுந்தர் .சி தெரிவித்துள்ளார்.

“செருப்பால் அடித்து, முந்தானையை பிடித்து இழுத்து…” சுந்தர்.சி வேதனை!

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் பாஜக வேட்பாளராக உள்ள ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் குஷ்புவுக்காக அதிமுக ஆகிய கூட்டணி கட்சிகள் பம்பரமாக சுற்றி வாக்கு சேகரித்து வருகிறார்கள். ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக சார்பில் மருத்துவர் எழிலன் போட்டியிடவுள்ள நிலையில் அங்கு தனக்கான வரவேற்பு மகத்தானதாக உள்ளது. அதனால் நிச்சயம் ஆயிரம் விளக்கில் வெற்றிபெறுவேன் என்று குஷ்பு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

“செருப்பால் அடித்து, முந்தானையை பிடித்து இழுத்து…” சுந்தர்.சி வேதனை!

இந்நிலையில் பாஜக வேட்பாளர் நடிகை குஷ்புவை ஆதரித்து அவரது கணவர் சுந்தர் சி பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்,” 2010ஆம் ஆண்டு எனது மனைவி தாக்கப்பட்டார் .அது என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று .என் வீட்டில் அம்மா, குஷ்புவின் அம்மா, என் பெண் குழந்தைகள் இருவரும் இருந்தார்கள்.நான் படப்பிடிப்புக்காக ஹைதராபாத்தில் இருந்தேன் .அப்போது குஷ்பு தாக்கப்பட்டார் என்ற செய்தியை அறிந்து பதறிப் போனேன். செருப்பை தூக்கி அடித்து முந்தானையை பிடித்து இழுத்து அவரை தாக்கினர். அது என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்று. என் வீட்டில் தாக்குதல் நடந்த போது நான் பட்ட கஷ்டம் சாதாரணம்தான் . அதுதான் பிரச்சாரத்துக்கு வருவதற்கான விதை. சினிமாவில் காட்டக்கூடிய அரசியலுக்கும், நிஜவாழ்க்கையில் காட்டக்கூடிய அரசியலுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது அது நிழல்; இது நிஜம்” என்றார்.