“உயிருக்கும் தோல்விக்கும் பயந்தவர்கள் போருக்கு வரக்கூடாது ” : நடிகை கஸ்தூரி விமர்சனம்!
உயிருக்கும் தோல்விக்கும் பயந்தவர்கள் போருக்கு வரக்கூடாது என ரஜினி அறிவிப்பு குறித்து நடிகை கஸ்தூரி விமர்சித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அடுத்த மாதம் அரசியல் கட்சி தொடங்குவதாக இருந்த நிலையில் உடல்நிலை குறைவு காரணமாக அரசியலுக்கு வர போவதில்லை என்று அறிவித்தார். நேற்று பிரேக்கிங் நியூஸாக இது மாறியது. ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்பதை பலரும் ஆதரித்தார்கள். ஆனால் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில், “எதிர்பார்த்ததுதான்.
எத்தனையோ முறை நான் உட்பட பலரும் சொன்னதுதான். எப்பவோ சொல்லியிருந்தால் ஏராளமானவர்களுக்கு வலியை தவிர்த்திருக்கலாம். வருடங்களை மிச்சப்படுத்தியிருக்கலாம். இப்பவாச்சும் சொன்னாரே.
இப்ப இல்லை, எப்பவுமே இல்லை ! கோடி பண நஷ்டத்தை விட கோடி மனக்கஷ்டம் பெரிது.உயிருக்கும் தோல்விக்கும் பயந்தவர்கள் போருக்கு வரக்கூடாது. ரஜினி அவர்களின் முடிவுக்கு பாராட்டுக்கள். நீங்கள் பூரண நலத்துடன் நிம்மதியாக நீடூழி வாழவேண்டும்” என்றார்.