இரட்டை அர்த்த பதிவுடன் வசைப்பாடிய இஸ்லாமியர்கள்! ஆவேசமடைந்த கஸ்தூரி

 

இரட்டை அர்த்த பதிவுடன் வசைப்பாடிய இஸ்லாமியர்கள்! ஆவேசமடைந்த கஸ்தூரி

சென்னை வடபழனியில் ‘கலப்பை மக்கள் இயக்கம்’சார்பில் 101-வது நாள் கொரோனா உதவி நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக நடிகை கஸ்தூரியும், இயக்குநர் தந்தை எஸ்ஏ சந்திரசேகரும் கலந்து கொண்டனர். அப்போது நடிகை கஸ்தூரி அவசியம் அரசியலுக்கு வர வேண்டுமென விஜயின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் மேடையிலேயே கோரிக்கை விடுத்தார்.

நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை கஸ்தூரி, பல்வேறு கட்சிகளிலிருந்து தனக்கு அழைப்பு வருகிறது. ஆனால் பெண்களுக்குப் பாதுகாப்பு தரும் கட்சியைத் தேர்ந்தெடுத்து அதில் தான் நான் இணைவேன். பாஜகவில் இணைவது குறித்து இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை. இன்னும் சில மாதங்களில் தன்னுடைய நிலைபாட்டை அறிவிப்பேன்” என தெரிவித்தார். இந்த பேட்டியே சர்ச்சைகளுக்கு பெயர் போன கஸ்தூரிக்கு வினையாக அமைந்தது. கஸ்தூரி கலந்து கொண்ட விழாவையும், அவர் அங்கு பேசிய பேச்சையும் வைத்து இரட்டை அர்த்தத்தில் பல ட்வீட்கள் பறந்தன.

இரட்டை அர்த்த பதிவுடன் வசைப்பாடிய இஸ்லாமியர்கள்! ஆவேசமடைந்த கஸ்தூரி

அதில் ஒருவர், “கலப்பை மக்கள் இயக்கம் விழாவில் நடிகை கஸ்தூரி பங்கேற்பு… என பதிவிட்டு அதற்கு விளை நிலம் வேண்டுமே! இது விலை நிலம் அதுவும் தரிசு பலரக கலைப்பைகள் உழுதது!” என இரட்டை அர்த்தத்தில் பதிவிட்டிருந்தார். மற்றொருவர், “பெண்களுக்கு பாதுகாப்பு தரும் கட்சியில் நான் விரைவில் இணைவேன் என நடிகை கஸ்தூரி கூறியதை சுட்டிக்காட்டி, சினிமாவில் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகரள் உட்பட சினிமா கலைஞர்கள் உங்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது போல பாதுகாப்பு கோருகிறீர்களா? மேடம்” என நக்கலாக ட்வீட் செய்திருந்தார்.

இதனால் ஆவேசமடைந்த நடிகை கஸ்தூரி, மேற்கண்ட இரண்டு ட்வீட்களையும் சுட்டிக்காட்டி, “இது தற்செயலா? இல்லை திட்டமிட்ட தாக்குதலா?
எனக்கு இஸ்லாமிய உடன்பிறப்புக்கள் உண்டு. இது போன்ற தாக்குதல்கள் என்னை பாதிக்காவிடினும் உங்களை போன்றவர்களால் என்னை நேசிக்கும் மதிக்கும் முஸ்லீம் சொந்தங்களுக்கு மிகவும் வருத்தம்.
May Allah grant you good sense” என பதிலடி கொடுத்துள்ளார். சிவனே என போய்ருந்தால் கூட இந்த இரட்டை அர்த்த பதிவுகள் வெளிச்சத்திற்கு வந்திருக்காது. அதனை தானே ஸ்கீரின்ஷாட் எடுத்து அதற்கு பதிலடியும் கொடுத்து தன் தலையில் தானே மண்ணை வாரிப்போட்டுக்கொண்டு இன்று இரட்டை அர்த்தங்களை ஊர் அறிய செய்துள்ளார் நடிகை கஸ்தூரி.