‘மன்னர்களுக்கு கேட்கும் உரிமை உள்ளது’… நான் பெகாசஸ் பற்றி பேசல ; நடிகை கங்கனா சூசகம்!

 

‘மன்னர்களுக்கு கேட்கும் உரிமை உள்ளது’… நான் பெகாசஸ் பற்றி பேசல ; நடிகை கங்கனா சூசகம்!

பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து நடிகை கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூசகமாக ஸ்டேட்டஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

‘அந்தக் காலத்தில் அரசு நிர்வாகத்தை பற்றி மக்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை மன்னர்கள் ரகசியமாக ஊருக்குள் சென்று கேட்பார்கள். மன்னர்களுக்கு அதற்கான உரிமை உள்ளது. நான் பெகாசஸ் பற்றி பேசவில்லை. ஹா ஹா ஹா’ என்று ஸ்டேட்டஸ் வைத்துள்ளார்.

‘மன்னர்களுக்கு கேட்கும் உரிமை உள்ளது’… நான் பெகாசஸ் பற்றி பேசல ; நடிகை கங்கனா சூசகம்!

பெகாசஸ் எனும் செயலி மூலம் அரசியல்வாதிகள் மற்றும் பத்திரிக்கையாளர்களை மத்திய அரசு உளவு பார்த்ததாக எழுந்த விவகாரம் பூதாகரமாக உருவெடுத்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் காங்கிரஸ் நாளை மறுநாள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல், இந்த சதிக்கு பின்னால் இருக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளது. ட்விட்டர், பேஸ்புக் என சமூக வலைதளங்கள் முழுவதிலும் பெகாசஸ் பற்றிய பேச்சு உலாவரும் நிலையில், நடிகை கங்கனா இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.

‘மன்னர்களுக்கு கேட்கும் உரிமை உள்ளது’… நான் பெகாசஸ் பற்றி பேசல ; நடிகை கங்கனா சூசகம்!

தனது சினிமா வாழ்க்கை ஒரு பக்கம் இருப்பினும் அரசியல் பற்றி பேசுவதற்கு கங்கனா ரனாவத் ஒருபோதும் தயங்கியதில்லை. அடிக்கடி சமூக வலைத்தளங்களில் சர்ச்சை தரும் கருத்துகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவார். இவர் பரப்பிய கருத்துக்களுக்காக வழக்குகள் கூட தொடரப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.