ராஜபாளையத்தில் களமிறங்கும் நடிகை கௌதமி : தொகுதி பங்கீடு முன்பே உளறி கொட்டிய பாஜக நிர்வாகி!

 

ராஜபாளையத்தில் களமிறங்கும் நடிகை கௌதமி : தொகுதி பங்கீடு முன்பே உளறி கொட்டிய  பாஜக நிர்வாகி!

ராஜபாளையத்தில் நடிகை கௌதமி வேட்பாளர் என தமிழக பாஜக தேர்தல் இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.

ராஜபாளையத்தில் களமிறங்கும் நடிகை கௌதமி : தொகுதி பங்கீடு முன்பே உளறி கொட்டிய  பாஜக நிர்வாகி!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பாஜக ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி மேலிடத் தேர்தல் இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் நடிகை கௌதமி கலந்துகொண்டார். அப்போது பேசிய சுதாகர் ரெட்டி, ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் கௌதமி வெற்றிபெற எனது வாழ்த்துகள் என்றார். இது அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் சலசலப்பை உண்டாக்கியது.

ராஜபாளையத்தில் களமிறங்கும் நடிகை கௌதமி : தொகுதி பங்கீடு முன்பே உளறி கொட்டிய  பாஜக நிர்வாகி!

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜக சார்பில் வேட்பாளராக நடிகை கெளதமியை நிறுத்த நாங்கள் முடிவெடுத்துள்ளோம். அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்தவுடன், இதுகுறித்து அறிவிக்கப்படும் என்றார். அதிமுக தொகுதிப் பங்கீடு இன்னும் இறுதியாகாத நிலையில் ராஜபாளையம் தொகுதி பாஜக வேட்பாளர் கௌதமி என்ற அறிவிப்பு அதிமுகவினர் மத்தியில் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.இந்த சூழலில் சட்டமன்றத் தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக முதல்வர் பழனிசாமியுடன் பா.ஜ.க இன்று பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. முதல்வர் இல்லத்தில் பாஜக நிர்வாகிகள் கிஷன் ரெட்டி. சி.வி.ரவி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.