காரில் கஞ்சா கடத்தல் : நடிகை மற்றும் டிரைவர் கைது!

 

காரில் கஞ்சா கடத்தல் : நடிகை மற்றும் டிரைவர் கைது!

கேரள மாநிலம் திருச்சூர் சாலக்குடி பஸ் நிலையத்தின் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.  அப்போது அப்பகுதியில் வந்த கார் ஒன்றை போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர்.  அதில் ஒரு பெண் மற்றும் கார் ஓட்டுநர் இருந்தனர்.  அந்த பெண்ணின் கைப்பையை  சோதித்தபோது அந்த கையில் ஒரு கிலோ மதிப்புள்ள கஞ்சா பொருட்கள் இருந்தது தெரியவந்தது
இதையடுத்து அந்த பெண் மற்றும் அந்த கார் ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர்.

காரில் கஞ்சா கடத்தல் : நடிகை மற்றும் டிரைவர் கைது!

இதில் அந்த பெண் சரிதா சலீம் என்பதும் கார் டிரைவரின் பெயர் சுதீர் சரபுதீன் என்பதும் தெரியவந்தது.  சரிதா சலீம்  சினிமா மற்றும் டிவி தொடர்களுக்கு தேவையான துணை நடிகர்களை ஏற்பாடு செய்து வந்துள்ளார் மேலும் அவர் மலையாளச் திரைப்படங்களிலும் சில சீரியல்களிலும் துணை நடிகையாக நடித்தது தெரியவந்தது.

காரில் கஞ்சா கடத்தல் : நடிகை மற்றும் டிரைவர் கைது!

சரிதா சலீம் மற்றும் சுதிர் இருவரும்  கேரளாவில் கஞ்சா விற்பனை செய்துள்ளனர்.  இவர்கள் ஆந்திராவிலிருந்து கஞ்சா பொருட்களை வாங்கிக்கொண்டு கேரளாவில் அமோகமாக விற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இந்த செயலில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.