நடிகை சித்ரா தற்கொலை வழக்கு : மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்!

 

நடிகை சித்ரா தற்கொலை  வழக்கு :  மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்!

நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

நடிகை சித்ரா தற்கொலை  வழக்கு :  மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்!

சின்னத்திரை நடிகை சித்ரா சென்னை நசரத்பேட்டையில் உள்ள ஓட்டல் அறையில் கடந்த 9 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு தொழிலதிபர் ஹேமந்துடன் பதிவு திருமணம் நடந்த நிலையில் திருமணமாகி இரண்டே மாதத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டதால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதில் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் ஹேமந்த்தை கைது செய்தது நசரத்பேட்டை போலீஸ். 6 நாட்களாக விசாரணை நடந்த நிலையில் ஹேம்நாத் கைது செய்யப்பட்டு பொன்னேரி கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பின்னர் அங்கிருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.

நடிகை சித்ரா தற்கொலை  வழக்கு :  மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்!

இந்நிலையில் சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது. வழக்கை சென்னை மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றம் செய்து காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக நடிகை சித்ரா தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்று முதல்வர் தனிப்பிரிவில் சித்ராவின் தாய் விஜயா மனு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.