“சேலையை பிடித்து இழுத்தனர்” : குஷ்பு பரபரப்பு குற்றச்சாட்டு

 

“சேலையை பிடித்து இழுத்தனர்” : குஷ்பு பரபரப்பு குற்றச்சாட்டு

மு.க.ஸ்டாலின் தனது ஆட்களை அனுப்பி வீட்டில் கல்லெறிந்தார் என்று குஷ்பு பரபரப்பு புகாரை கூறியுள்ளார்.

“சேலையை பிடித்து இழுத்தனர்” : குஷ்பு பரபரப்பு குற்றச்சாட்டு

ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் குஷ்புவுக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, நேற்று பரப்புரை மேற்கொண்டார். இதை தொடர்ந்து மக்கள் மத்தியில் பேசிய நடிகையும் வேட்பாளருமான குஷ்பு, ” ஐந்து ஆண்டுகளில் திமுக இந்த தொகுதிக்காக என்ன செய்தது? இந்த தொகுதியில் எந்த திட்டமும் நிறைவேற்றவில்லை. நான் வெற்றி பெற்றால் அது மக்களின் வெற்றியாக இருக்கும். பெண்களின் பயத்தை நீக்கவே நான் சட்டமன்றத்திற்கு செல்ல நினைக்கிறேன். ஆயிரம்விளக்கு திமுகவின் கோட்டை என்கிறார்கள் . ஆனால் இது திமுகவின் கோட்டை அல்ல ;இது அதிமுகவின் கோட்டை பாஜகவின் கோட்டை ; இது கூட்டணி கட்சிகளின் கோட்டை; அதை நாங்கள் நிரூபிப்போம்” என்றார்.

“சேலையை பிடித்து இழுத்தனர்” : குஷ்பு பரபரப்பு குற்றச்சாட்டு

தொடர்ந்து பேசிய அவர், “திமுகவின் கோட்டை என்றால் 10 ஆண்டுகளுக்கு முன் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதிக்கு சென்றார். திமுக பேச்சாளர்கள் தொடர்ந்து பெண்களை இழிவுபடுத்தி பேசி வருகின்றனர் .முதல்வரின் தாய் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார் .அவரைப் பற்றி தவறாக பேசி உள்ளார்கள்.ஸ்டாலின் தனது ஆட்களை அனுப்பி வீட்டில் கல்லெறிந்தார்; சேலையை பிடித்து இழுத்து அதிகப்படுத்தினர் . ஜெயலலிதா நடந்த அத்தனை அவமானங்களையும் நானும் சந்தித்தேன்” என்றார்.