சீரியல் நடிகை சித்ராவின் உடலுக்கு நடிகர்கள், ரசிகர்கள் அஞ்சலி!

 

சீரியல் நடிகை சித்ராவின் உடலுக்கு நடிகர்கள், ரசிகர்கள் அஞ்சலி!

சித்ராவின் உடல் இறுதி சடங்கிற்காக கோட்டூர்புரம் கொண்டு வரப்பட்டது.

சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அவர் சென்னை நசரத்பேட்டை உள்ள தனியார் விடுதியில் தனது கணவர் ஹேமந்துடன் தங்கி இருந்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து விடுதிக்கு இரவு 2.30 மணி அளவில் வந்த சித்ரா அதிகாலை 5 மணியளவில் தூக்கில் பிணமாக மீட்கப்பட்டதாக நசரத்பேட்டை போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீரியல் நடிகை சித்ராவின் உடலுக்கு நடிகர்கள், ரசிகர்கள் அஞ்சலி!

கடந்த அக்டோபர் 19ஆம் தேதி ஹேமந்த் – சித்ரா இருவரும் பெற்றோர் முன்னிலையில் பதிவு திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில் வரும் பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெறவிருந்தது. இதனால் சித்ரா திருமணம் செய்து இரண்டு மாதங்களே ஆன நிலையில் அவர் மரணம் குறித்து ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சின்னத்திரை நடிகை சித்ராவின் பிரேத பரிசோதனை நிறைவடைந்த நிலையில் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சீரியல் நடிகை சித்ராவின் உடலுக்கு நடிகர்கள், ரசிகர்கள் அஞ்சலி!

அதேசமயம் தனது மகளை ஹேமந்த் ரவி அடித்து கொன்று விட்டதாக சித்ராவின் தாய் விஜயா தெரிவித்துள்ளார். இதனால் போலீசார் தொடர்ந்து சித்ராவின் கணவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சித்ராவின் உடல் இறுதி சடங்கிற்காக கோட்டூர்புரம் கொண்டு வரப்பட்டது.

சீரியல் நடிகை சித்ராவின் உடலுக்கு நடிகர்கள், ரசிகர்கள் அஞ்சலி!

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள இல்லத்தில் நடிகை சித்ராவின் உடலுக்கு நடிகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகை சித்ராவின் இறுதிச்சடங்கு நிகழ்வில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.