“எல்லாருக்கும் நன்றி”… விவேக் மனைவி அருள்செல்வி உருக்கம்!

 

“எல்லாருக்கும் நன்றி”… விவேக் மனைவி அருள்செல்வி உருக்கம்!

நகைச்சுவை நடிகர் விவேக் உடல்நலக்குறைவால் நேற்று காலை உயிரிழந்தார். அவரது உடல் விருகம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, நேற்று மாலை மேட்டுப்பாக்கம் பகுதியில் உள்ள மின்மயானத்தில் காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

“எல்லாருக்கும் நன்றி”… விவேக் மனைவி அருள்செல்வி உருக்கம்!

தனது நகைச்சுவை மூலமாக மூடநம்பிக்கைகளை வேரறுக்க பாடுபட்ட விவேக், சுற்றுச்சூழலை பாதுகாக்க லட்சக் கணக்கான மரங்களை நட்டார். வருங்கால சந்ததியினருக்கு இயற்கையை பாதுகாத்து வைக்க பாடுபட்டார். இப்படி சமூகத்திற்காக பெரும்பங்கு ஆற்றிய இந்த மாமனிதரின் மறைவு எல்லாரையும் கலங்கடித்தது. விவேக்கின் மகன் இல்லாததால், மகன் ஸ்தானத்தில் இருந்து அவரது மகள் தேஜஸ்வினி தான் உறுதி சடங்குகளை செய்தார். விவேக்கின் உடல் தகன மேடையில் வைக்கப்பட்ட போது அவரது மகள், அப்பா என கதறியது காண்போரை கண் கலங்க வைத்தது. சின்ன கலைவாணர் விவேக் மறைந்தாலும் அவர் நட்ட மரங்களும் அவரது புகழும் என்றென்றும் ஓங்கி நிற்குமென ரசிகர்கள் மனதை தேற்றிக் கொண்டனர்.

“எல்லாருக்கும் நன்றி”… விவேக் மனைவி அருள்செல்வி உருக்கம்!

இந்த நிலையில், சென்னையில் விவேக் மனைவி அருள்செல்வி தனது மகள்களுடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், என் கணவரை இழந்த இந்த நேரத்தில் என் குடும்பத்துக்கு பக்க பலமாக துணை நின்ற மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் மனமார்ந்த நன்றிகள். என் கணவருக்கு அரசு மரியாதை கொடுத்ததற்கு மிக்க நன்றி. அதை என்றும் மறக்க மாட்டோம். நன்றியோடு நினைத்துப் பார்ப்போம். நீங்கள் கொடுத்தது மிகப்பெரிய கௌரவம். காவல்துறை சகோதரர்களுக்கு மிக்க நன்றி. கடைசி வரைக்கும் எங்களுக்கு பக்க பலமாக இருந்தீர்கள். ஊடகத்துறையினருக்கும் எனது நன்றிகள் என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து, உலகெங்கிலும் உள்ள எனது கணவரின் கோடான கோடி ரசிகர்களுக்கும் நன்றி என்று தெரிவிக்கும் போது அவரது கண்கள் கலங்கியது. உடனே அங்கிருந்து எழுந்து சென்று விட்டார்.