அரசு மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை, தரமான உணவு- நடிகர் விவேக்

 

அரசு மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை, தரமான உணவு- நடிகர் விவேக்

அரசு மருத்துவமனை சிகிச்சை சிறந்த முறையில் உள்ளது என பாராட்டி நடிகர் விவேக் டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.

நம் நாட்டில் கொரோனா வைரஸால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாம் இடத்திலுள்ளது. இங்கு நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை தொற்று நோயின் கோரத்தாண்டவம் அதிபயங்கரமாக உள்ளது. அங்குள்ள மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் நோயாளிகளால் நிரம்பி வழிகிறது. இருப்பினும் அரசு மருத்துவமனை மருத்துவர்களும், மற்ற சுகாதார பணியாளர்களும் குடும்பத்தை மறந்து இரவுப்பகலாக கொரோனாவுடன் போராடிவருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது மைத்துனர், கொரோனாவால் காய்ச்சல், மூச்சு திணறலுடன் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 10 நாட்களில் முற்றிலும் குணமடைந்தார். எளிய இடம். ஆனால் சிறந்த மருத்துவ வசதி, சிகிச்சை, தரமான உணவு கிடைத்ததாம். அரசு மருத்துவர்களுக்கு நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.