கொரோனா தடுப்பூசி போட்டுக்கோங்க.. நடிகர் விவேக் அட்வைஸ்!

 

கொரோனா தடுப்பூசி போட்டுக்கோங்க.. நடிகர் விவேக் அட்வைஸ்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவிக் கொண்டிருப்பதால், தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக பின்பற்றப்பட்டு வருகிறது. தடுப்பூசி போடும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தடுப்பூசிகள் குறித்து மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக நடிகர்களும் நடிகைகளும் அரசியல் தலைவர்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர். அந்த வகையில், இன்று சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கோங்க.. நடிகர் விவேக் அட்வைஸ்!

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தடுப்பூசி பற்றிய வதந்திகள் அதிகமாக பரவி வருகிறது. தடுப்பூசி பாதுகாப்பானது என்பதை மக்களுக்கு உணர்த்தவே அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக் கொண்டேன். தமிழ்நாட்டில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். மாஸ்க் போடுவது, கைகளை சுத்தப்படுவதோடு மட்டும் இல்லாமல் மருத்துவ ரீதியான பாதுகாப்பையும் மக்கள் மேற்கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கோங்க.. நடிகர் விவேக் அட்வைஸ்!

தொடர்ந்து பேசிய அவர், அரசு மூலமாக வரும் தடுப்பூசி தான் உயிரைக் காப்பாற்றும். மக்கள் இதை புரிந்துக் கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு கொரோனா வந்தாலும் உயிரிழப்பு இருக்காது. இரண்டாவது டோஸ் போட்டப்பட்ட பிறகு தான் மருந்து செயல்பட ஆரம்பிக்கும். அதுவரைக்கும் பாதுகாப்பு இல்லாமல் இருந்தால் கொரோனா பாதிப்பு வரும். தடுப்பூசி செலுத்துக் கொண்டாலும் பாதுகாப்போடு இருக்க வேண்டும். திறமையான மருத்துவர்களும் செவிலியர்களும் அரசு மருத்துவமனையில் இருக்கிறார்கள். அவர்களை நம்பி தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.