கனடாவில் தவித்த விஜய்யின் மகன் வீடு திரும்பினார்!

 

கனடாவில் தவித்த விஜய்யின் மகன் வீடு திரும்பினார்!

கொரோனாவால் கனடாவில் தவித்து வந்த நடிகர் விஜய்யின் மகன், சிறப்பு விமானம் மூலம் சென்னை திரும்பியுள்ளார். 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் வீடு திரும்பியுள்ளார். இதனால் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்தனர்.

கனடாவில் தவித்த விஜய்யின் மகன் வீடு திரும்பினார்!

நடிகர் விஜய்-சங்கீதா தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள். மூத்த மகன் ஜேசன் சஞ்சய், இளைய மகள் திவ்யா சாஷா. சஞ்சய்க்கு திரைப்படத்துறையில் ஆர்வம். திவ்யாவுக்கு விளையாட்டில் ஆர்வம். இந்த நிலையில், திரைப்பட துறை தொடர்பாக கனடாவில் உள்ள கல்லூரியில் ஜேசன் சஞ்சய் படித்து வருகிறார்.

இந்த நிலையில், உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் உள்ளூர், வெளிநாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், கனடாவில் இருந்த விஜய்யின் மகன் சஞ்சய், நாடு திரும்ப முடியாமல் அங்கேயே தங்கி இருந்தார். இதையடுத்து வெளிநாட்டில் சிக்கியவர்களை சிறப்பு விமானம் மூலம் அழைத்து வர மத்திய அரசு பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தது.

கனடாவில் தவித்த விஜய்யின் மகன் வீடு திரும்பினார்!
கட்டத்துக்குள் இருப்பவர் விஜய் மகன் சஞ்சய்

ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டிருக்கும் நிலையில் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்மூலம் நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் நாடு திரும்பி நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தனிமைப்படுத்திக் கொண்டார். 14 நாள்கள் தனிமைப்படுத்திக் கொண்ட ஜேசன் சஞ்சய், வீடு திரும்பியுள்ளார். பல மாதங்கள் கழித்து அவர் வீடு திரும்பியிருப்பதால் விஜய் உள்ளிட்ட குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.