நடிகர் விஜய் சேதுபதி ரசிகர் மன்ற தலைவர் வெட்டிக் கொலை!

 

நடிகர் விஜய் சேதுபதி ரசிகர் மன்ற தலைவர் வெட்டிக் கொலை!

நடிகர் விஜய் சேதுபதி ரசிகர் மன்ற தலைவர் மணிகண்டன் மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி கோவிந்தசாலை பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். நடிகர் விஜய்சேதுபதியின் ரசிகர் மன்ற தலைவராக உள்ளார். அத்துடன் அன்றாட பிழைப்புக்காக பெயிண்டர் தொழிலை செய்து வந்துள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி ரசிகர் மன்ற தலைவர் வெட்டிக் கொலை!

இந்நிலையில் நேற்று மாலை 3 மணியளவில் செல்போன் அழைப்பு ஒன்று வந்ததால் வீட்டிலிருந்து மணிகண்டன் புறப்பட்டு சென்றுள்ளார். பின்னர் இரவு 10 மணியளவில் வீட்டிற்கு தனது பைக்கில் வந்து கொண்டிருந்த போது மர்ம நபர்கள் அவரை வழிமறித்துள்ளனர். கண் இமைக்கும் நேரத்தில் அரிவாளால் மணிகண்டனை அவர்கள் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்துள்ளனர்.

நடிகர் விஜய் சேதுபதி ரசிகர் மன்ற தலைவர் வெட்டிக் கொலை!

பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய கொண்டிருந்த மணிகண்டனை அப்பகுதியை சேர்ந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி மணிகண்டன் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த உருளையன்பேட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட மணிகண்டனுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.