ஆயிரத்தில் ஒருவன் கெட் அப்பில் நடிகர் விஜய்! ரசிகர்கள் அதகளம்

 

ஆயிரத்தில் ஒருவன் கெட் அப்பில் நடிகர் விஜய்! ரசிகர்கள் அதகளம்

நடிகர் விஜய்யை எம்ஜிஆரின் மறு உருவமாக சித்தரித்து தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளன.

சில தினங்களுக்கு முன்பு நடிகர் விஜய்யை எம்.ஜி.ஆர்-ஆகவும் அவரது மனைவி சங்கீதாவை ஜெயலலிதா போலவும் போட்டோ எடிட் செய்து போஸ்டர் ஒட்டி அதிர்ச்சி கொடுத்தனர் விஜய் ரசிகர்கள். இதற்கு விஜய் ரசிகர் மன்றத்தில் இருந்தே எதிர்ப்பு கிளம்பியதாக செய்தி வந்தது. அதைத் தொடர்ந்து, நடிகர் விஜய்யை விவேகானந்தர் போல ஒட்டி பா.ஜ.க-வினர் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தினர். ஏற்கனவே நடிகர் விஜய்யை பா.ஜ.க-வினர் விமர்சித்து வரும் நிலையில் இந்த போஸ்டர் மேலும் பிரச்னையை பெரிதாக்கியது.

ஆயிரத்தில் ஒருவன் கெட் அப்பில் நடிகர் விஜய்! ரசிகர்கள் அதகளம்

இந்நிலையில் 2021இல் தமிழகத்திற்கு தலைமை ஏற்க வர வேண்டும் என்றும், தமிழகத்தின் இரண்டாம் புரட்சித் தலைவரே என்றும் சுவரொட்டி அச்சிட்டு தேனியில் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் ‘உன் ஆட்சியே! நாளைய நல்லாட்சி!!’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.