ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு முழு நுழைவு வரியையும் செலுத்தினார் நடிகர் விஜய்!

 

ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு முழு நுழைவு வரியையும் செலுத்தினார் நடிகர் விஜய்!

நடிகர் விஜய் 2012ஆம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்தக் காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அணுகிய போது, வாகனத்திற்கு நுழைவு வரி செலுத்த அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, காரை இறக்குமதி செய்தபோது, இறக்குமதி வரி செலுத்தியுள்ள நிலையில், நுழைவு வரி விதிக்க தடை விதிக்க வேண்டும் என விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு முழு நுழைவு வரியையும் செலுத்தினார் நடிகர் விஜய்!

இந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி சுப்ரமணியம், நடிகர்கள் முறையாக உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும் என்றும், அவர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது என கருத்து தெரிவித்திருந்தார். மேலும், நடிகர் விஜய்க்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, அதை முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு இரண்டு வாரத்தில் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார்.

ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு முழு நுழைவு வரியையும் செலுத்தினார் நடிகர் விஜய்!

தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதன்பின் தனி நீதிபதியின் அனைத்து உத்தரவுகளுக்கும் இடைக்கால தடை விதித்து உத்தரவிடப்பட்டது. அதேபோல விஜய் செலுத்த வேண்டிய காருக்கான வரியை ஒரு வாரத்தில் வணிகவரித்துறை கணக்கிட்டு சொல்ல வேண்டும் என்றும், மீதமுள்ள 80 சதவீத வரித்தொகையை அடுத்த ஒரு வாரத்தில் செலுத்த வேண்டும் என்றும் ஆணையிட்டது. அதன்படி நுழைவு வரி பாக்கியான 32 லட்சம் ரூபாயை நடிகர் விஜய் செலுத்தியுள்ளார். ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான மொத்த நுழைவு வரித்தொகையான 40 லட்சம் ரூபாயையும் விஜய் செலுத்திவிட்டார்.