‘நம் தரத்தை தாழ்த்திக் கொள்ள வேண்டாம்’.. பாரதிராஜாவுக்கு நன்றி தெரிவித்து நடிகர் சூர்யா ட்வீட்!

 

‘நம் தரத்தை தாழ்த்திக் கொள்ள வேண்டாம்’.. பாரதிராஜாவுக்கு நன்றி தெரிவித்து நடிகர் சூர்யா ட்வீட்!

சமீப காலமாக அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டு வரும் நடிகை மீரா மிதுன் நடிகர் சூர்யாவின் மனைவி ஜோதிகாவையும், நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவையும் கடுமையாக விமர்சித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் வரம்பு மீறி தகாத வார்த்தைகளில் பேசியிருந்தார். இவ்வாறு மீரா மிதுன் பேசியதற்கு நெட்டிசன்கள் அவரை திட்டித்தீர்த்து வருகின்றனர். ஆனால் மீரா மிதுனுக்கு எதிராக நடிகர் விஜய்யோ அல்லது சூர்யாவோ எந்த கருத்தையும் வெளியிடவில்லை. மேலும் மீரா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

‘நம் தரத்தை தாழ்த்திக் கொள்ள வேண்டாம்’.. பாரதிராஜாவுக்கு நன்றி தெரிவித்து நடிகர் சூர்யா ட்வீட்!

நேற்று நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யாவை மீரா மிதுன் விமர்சித்தது தொடர்பாக இயக்குனர் பாரதிராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், சூர்யா மற்றும் விஜய்யை இழந்து பேசுவது ஏற்கத்தக்கது அல்ல என்றும் கடிவாளம் இல்லாமல் அவர் வரம்பு மீறி பேசுவது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும் அவதூறாக பேசியும் எந்த சங்கமும் நீதிக்குரல் எழுப்பாதது வியப்பை அளிக்கிறது என்றும் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

‘நம் தரத்தை தாழ்த்திக் கொள்ள வேண்டாம்’.. பாரதிராஜாவுக்கு நன்றி தெரிவித்து நடிகர் சூர்யா ட்வீட்!

இந்த நிலையில் நடிகர் சூர்யா பாரதிராஜாவுக்கு நன்றி தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “எனது தம்பி தங்கைகளின் நேரமும், சக்தியும் ஆக்கப்பூர்வமான செயல்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதே என் விருப்பம். இயக்குனர் இமயம் திருமிகு. பாரதிராஜா அவர்களுக்கு என் உளப்பூர்வமான நன்றிகள்..” என்று குறிப்பிட்டுள்ளார்.