நீங்க கொடுக்கிற கசாயமும், கறிக்குழம்பும் ஜம்முன்னு இருக்காம்! சித்த மருத்துவர் வீரபாபுவை பாராட்டிய சூரி

 

நீங்க கொடுக்கிற கசாயமும், கறிக்குழம்பும் ஜம்முன்னு இருக்காம்! சித்த மருத்துவர் வீரபாபுவை பாராட்டிய சூரி

சென்னையில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தனியாக அமைக்கப்பட்ட சித்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 3-க்கும் மேற்பட்டவர்களுக்கு சித்த மருந்துகள் கொடுக்கப்பட்டு அவர்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முழுமையாக நலம் பெற்றுத் திரும்பியுள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள், அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் ஒரு உயிரிழப்புக் கூட ஏற்படவில்லை. அதற்கு காரணம் அங்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர் வீரபாபு.

நீங்க கொடுக்கிற கசாயமும், கறிக்குழம்பும் ஜம்முன்னு இருக்காம்! சித்த மருத்துவர் வீரபாபுவை பாராட்டிய சூரி

இந்நிலையில் காமெடி நடிகர் சூரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைவருக்கும் வணக்கம், எல்லாரையும் ஆறு மாசமா முடக்கிப்போட்டுறுச்சி இந்த பாலாப்போன கொரோனா. ரத்த சொந்தம், நெருங்கிய நண்பர்கள் யாராய் இருந்தாலும் சமூக இடைவெளி விட்டே பேச வேண்டி இருக்கு. உலகத்துக்கே இதுதான் நிலமை. இந்த சூழலில் சென்னை சாலிகிராமம் ஜவஹர் வித்யாலயா கல்லூரியில் சித்த மருத்துவர் திரு. வீரபாபு அவர்கள் அவரது மூலிகை கசாயம் மூலமா கொரோனாவால பாதிக்கப்பட்ட 3500க்கும் மேற்பட்டவர்களை குணப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி இருக்காறாம். குறிப்பா இதுல ஒரு உயிரிழப்பு கூட ஏற்படலயாம். எல்லாரும் எட்ட நின்னு பாக்குறப்போ, நீங்க மட்டும் கிட்ட நின்னு தொட்டு பரிசோதிக்கும்போது கண்ணுக்கு தெரியிற சாமியாவே, உங்கள கும்புடதோனுது. அப்படீன்னு, வைத்தியம் பாத்துட்டு வர்ற அத்தனை பேரும் சொல்லும்போது, ரொம்ப சந்தோஷமா இருக்குங்க சார்.

இத்தனைபேரையும் காப்பாத்துன, காப்பாத்திக்கிட்டிருக்கிற உங்களையும், உங்ககூட வேலை செய்யிறவங்களையும், அந்த ஆத்தா மதுரை மீனாட்சி எப்பவும் காப்பாத்துவா… முக்கியமா நீங்க கொடுக்கிற கசாயம், கறிக்குழம்பு மாதிரி, சும்மா ஜம்முன்னு இருக்காம்…. வாழ்த்துக்கள் வீரபாபு சார்” என தெரிவித்துள்ளார்.