‘முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு’… நடிகர் சிவக்குமார் வேண்டுகோள்!

 

‘முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு’… நடிகர் சிவக்குமார் வேண்டுகோள்!

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை பதவி ஏற்றுக்கொண்டார். ஸ்டாலினை தொடர்ந்து 34 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். 10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்து இருப்பதால், ஸ்டாலின் மக்களுக்கு என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

‘முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு’… நடிகர் சிவக்குமார் வேண்டுகோள்!

இந்த நிலையில், தமிழ் படித்தால் நிச்சயம் வேலை கிடைக்கும் என்ற நிலையை உருவாக்க வேண்டும் என நடிகர் சிவக்குமார் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘தமிழக முதல்வராக ஐந்து முறை கருணாநிதி பதவி வகித்திருக்கிறார். 19 ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆட்சி செய்திருக்கிறார். 125 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருப்பது திமுகவின் இமாலய சாதனை.

‘முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு’… நடிகர் சிவக்குமார் வேண்டுகோள்!

முதலமைச்சருக்கு எனது வேண்டுகோள் இது தான். மருத்துவமனைகளில் ஆக்சிஜன், படுக்கைகள், வென்டிலேட்டர் உள்ளிட்ட வசதிகளுக்கு தட்டுப்பாடாக உள்ளது. இந்த இக்கட்டான காலகட்டத்தில் இருந்து மக்களை காப்பாற்றுங்கள். பிற மாநிலங்களில் எல்லாம் தாய் மொழிகளை படித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறது. தமிழகத்தில் மட்டும் அந்த நிலை இல்லை.

செம்மொழி மாநாடு நடத்தி தமிழுக்கு பெருமை சேர்த்த முத்தமிழ் அறிஞரின் வாரிசு நீங்கள். தமிழ் மொழியில் பட்டப் படிப்பு படித்தால் நிச்சயம் வேலை என்ற நிலையை உருவாக்கினால் தமிழ் நிச்சயம் வாழும். கலைஞரின் மடியில் வளர்ந்த நீங்கள், ஸ்டாலினின் ஆட்சிப் பொற்காலம் என்று சொல்வது போல் நல்லாட்சியை உருவாக்குங்கள். உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்’ என்று கூறியுள்ளார்.