நடிகர் செந்திலுக்கு கொரோனா; தீவிர சிகிச்சை!

 

நடிகர் செந்திலுக்கு கொரோனா; தீவிர சிகிச்சை!

பிரபல நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

நடிகர் செந்திலுக்கு கொரோனா; தீவிர சிகிச்சை!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் தேர்தல் பரப்புரை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பரப்புரையில் ஈடுபட்ட வேட்பாளர்கள், கட்சி நிர்வாகிகள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நடிகர் செந்திலுக்கு கொரோனா; தீவிர சிகிச்சை!

இந்நிலையில் நகைச்சுவை நடிகர் செந்தில் அவரது மனைவி, மகன், மருமகள் என அனைவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் பாஜகவில் இணைந்த செந்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்காக தீவிர பிரச்சாரத்தில் செந்தில் ஈடுபட்டார். அந்த வகையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட செந்தில் குடும்பத்தார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் சிகிச்சைக்கு பிறகு ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்கள் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.அத்துடன் அவரது உடல் நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.