மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் இன்று சந்திப்பு!

 

மக்கள் மன்ற நிர்வாகிகளுடன்  நடிகர் ரஜினிகாந்த் இன்று சந்திப்பு!

மக்கள் மன்ற நிர்வாகிகளை நடிகர் ரஜினிகாந்த் சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் இன்று சந்தித்து பேசுகிறார்.

மக்கள் மன்ற நிர்வாகிகளுடன்  நடிகர் ரஜினிகாந்த் இன்று சந்திப்பு!

கடந்த 2017ம் ஆண்டு அரசியல் வருகையை உறுதி செய்த ரஜினிகாந்த் அதன் பிறகு எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. அவ்வப்போது சில விவகாரங்கள் குறித்து பேட்டியளித்த அவர், படங்களில் நடிப்பதில் அக்கறை காட்டி வந்தார். குறிப்பாக அவரது நண்பரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான தலைவருமான கமல் ஹாசன் தேர்தலில் களம்கண்ட நிலையிலும், தன்னுடைய இலக்கு சட்டமன்ற தேர்தல் தான் என்ற நடிகர் ரஜினிகாந்த் 6 மாதங்களில் கட்சி ஆரம்பிப்பார் என்றும் 2021-ல் நடக்கும் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெறுவார் என்றெல்லாம் சொல்லப்பட்டது. ஆனால் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவே அவர் உடல்நலனை கருதி இனி அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்து விட்டார்.

மக்கள் மன்ற நிர்வாகிகளுடன்  நடிகர் ரஜினிகாந்த் இன்று சந்திப்பு!

இந்நிலையில் நடிகர் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை இன்று சந்தித்து பேசவுள்ளார். ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க மாவட்ட செயலாளர்களுக்கு தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மாற்று கட்சியில் இணைந்து வருவதால் இந்த கூட்டம் நடைபெறுகிறது.முன்னதாக நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்காவிற்கு மருத்துவ பரிசோதனைக்காக சென்ற நிலையில் கடந்த ஜூலை 9 ஆம் தேதி அதிகாலை சென்னை திரும்பியது குறிப்பிடத்தக்கது.