அமிதாப் பச்சனிடம் போனில் நலம் விசாரித்தார் நடிகர் ரஜினிகாந்த்

 

அமிதாப் பச்சனிடம் போனில் நலம் விசாரித்தார் நடிகர் ரஜினிகாந்த்

இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து அமிதாப் மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அமிதாப் பச்சனிடம் போனில் நலம் விசாரித்தார் நடிகர் ரஜினிகாந்த்

இதுகுறித்து அபிஷேக் பச்சன் தனது டிவிட்டர் பக்கத்தில் , “எனக்கும், என் அப்பாவுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகளுடன் நாங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோம். அனைவரும் பதற்றம் அடையாமல் அமைதி காக்கவேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

அமிதாப் பச்சனிடம் போனில் நலம் விசாரித்தார் நடிகர் ரஜினிகாந்த்

இந்நிலையில் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமிதாப் பச்சனிடம் நடிகரும் அமிதாப் பச்சனின் நெருங்கிய நண்பருமான  ரஜினிகாந்த் போனில் நலம் விசாரித்துள்ளார்.