புதிய நீதிக்கட்சி ஏ.சி. சண்முகத்துடன் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை!

 

புதிய நீதிக்கட்சி ஏ.சி. சண்முகத்துடன் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை!

புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகத்துடன் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை மேற்கொண்டார்.

புதிய நீதிக்கட்சி ஏ.சி. சண்முகத்துடன் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை!

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் ஏ.சி. சண்முகம் இருவரும் சந்தித்து பேசி வருகின்றனர். விஜயதசமியில் அரசியல் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் எங்கள் இலக்கு என்று அறிவித்த ரஜினி விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதனால்  ரஜினி தலைமையில் கடந்த மார்ச் மாதம் 5 ஆம் தேதி  சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

புதிய நீதிக்கட்சி ஏ.சி. சண்முகத்துடன் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை!

இதை தொடர்ந்து நவம்பர் மாதம் ரஜினி அரசியல் கட்சி தொடர்வார் என்று கணிக்கப்பட்ட நிலையில் கொரோனா காரணமாக ரஜினியின் அறிவிப்பு தள்ளிப்போனது.இதை தொடர்ந்து ரஜினி விரைவில் அரசியல் கட்சி குறித்து அறிவிப்பார் என்று அவரது அபிமானிகள் பலரும் எதிர்பார்த்து காத்து கிடக்கின்றனர் .