“ஸ்டாலினுக்கு தெரிந்தது சம்சாரம்; முத்தக்காட்சியின் பெருமை இவருக்கு தான்” : ராதாரவி விமர்சனம்!!

 

“ஸ்டாலினுக்கு தெரிந்தது சம்சாரம்; முத்தக்காட்சியின் பெருமை இவருக்கு தான்” : ராதாரவி விமர்சனம்!!

கருணாநிதி ஒரு ஏமாற்றுக்காரர் என்று பாஜக ஆதரவாளர் நடிகர் ராதாரவி பரப்புரையில் விமர்சித்து பேசியுள்ளார்.

“ஸ்டாலினுக்கு தெரிந்தது சம்சாரம்; முத்தக்காட்சியின் பெருமை இவருக்கு தான்” : ராதாரவி விமர்சனம்!!

பாஜக ஆதரவாளரான நடிகர் ராதாரவி நேற்று புதுச்சேரியில் பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “நான் ரெடி நீங்க ரெடியா என்று ஸ்டாலின் கேட்கிறார். ஏன் ஸ்டாலின் ரெடியாகும் போது தான் நம்மும் ரெடி ஆகவேண்டுமா? சமஸ்கிருதம் என்ற வார்த்தையை சொல்லவே ஸ்டாலினுக்கு தெரியாது. அவருக்கு தெரிந்தது சம்சாரம் தான் . பாஜகவில் சேர்ந்த பிறகுதான் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்டுள்ளது.

“ஸ்டாலினுக்கு தெரிந்தது சம்சாரம்; முத்தக்காட்சியின் பெருமை இவருக்கு தான்” : ராதாரவி விமர்சனம்!!

இந்தி கற்றுக் கொள்ளக்கூடாது என திமுக தான் கூறியது. ஆனால் திமுகவில் உள்ளவர்கள் அனைவரும் பேசுகிறார்கள். தூர்தர்ஷன் என்ற பெயரை மாற்றக்கோரி கருணாநிதி டிவியை உடைக்கும் போராட்டம் செய்தார். அப்போது நானும் அந்த போராட்டத்தில் கலந்து கொண்டேன். ஆனால் கருணாநிதி தூக்கி போட்ட டிவி உள்ளே எதுவுமே இல்லை .அந்த அளவுக்கு கருணாநிதி ஒரு ஏமாற்றுக்காரர்” என்றார்.

“ஸ்டாலினுக்கு தெரிந்தது சம்சாரம்; முத்தக்காட்சியின் பெருமை இவருக்கு தான்” : ராதாரவி விமர்சனம்!!

தொடர்ந்து பேசிய அவர், “இப்போது பல கட்சிகள் வந்துவிட்டது. கமலஹாசன் கூட கட்சி ஆரம்பித்து விட்டார் . முத்தக்காட்சியை அறிமுகப்படுத்திய பெருமை கமலை தான் சேரும். பல தயாரிப்பாளர்களை நடக்க விட்ட கமல் ஹாசன் இன்று கோவை தெற்கு தொகுதியில் நடையோ நடை என்று நடந்து கொண்டிருக்கிறார் ” என்று கூறினார்