“ஜெயலலிதா, ஜெயராஜ், ஜெயபிரியா… அடுத்த பிரச்னை வரும் வரை மட்டுமே இவை”… நடிகர் பிரசன்னா ஆதங்கம்!

 

“ஜெயலலிதா, ஜெயராஜ், ஜெயபிரியா… அடுத்த பிரச்னை வரும் வரை மட்டுமே இவை”… நடிகர் பிரசன்னா ஆதங்கம்!

நம் நாட்டில் நடக்கும் பல சர்ச்சையான மரணங்கள்மற்றும் கொடுமை சம்பவங்கள் அவ்வப்போது மக்களுக்கு கொந்தளிப்பை ஏற்படுத்துகின்றன. பின்னர் சில நாட்களுக்கு சமூக வலைத்தளம் முழுக்க அந்த பிரச்சினைகள் தான் தீயாய் பற்றி எரியும். ஆனால் அவை எல்லாம் சில காலத்திற்கு தான். பின்னர் எல்லாரும் அதை மறந்து போகின்றனர். மறக்கடிக்கப்படுகின்றனர் என்று கூட சொல்லலாம்.

“ஜெயலலிதா, ஜெயராஜ், ஜெயபிரியா… அடுத்த பிரச்னை வரும் வரை மட்டுமே இவை”… நடிகர் பிரசன்னா ஆதங்கம்!
தற்போது, ஜெயராஜ், பென்னிக்ஸ் மற்றும் சிறுமி ஜெயபிரியா இவர்களது மரணம் தான் தமிழகம் முழுதும் பற்றி எரியும் விஷயமாக உள்ளது. சாத்தான்குளம் தந்தை-மகன் மரணத்தில் உள்ள மர்மங்கள் இன்னும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன. சிபிஐ விசாரணையில் திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. புதுக்கோட்டையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெண் குழந்தைகளை வளர்ப்போர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

“ஜெயலலிதா, ஜெயராஜ், ஜெயபிரியா… அடுத்த பிரச்னை வரும் வரை மட்டுமே இவை”… நடிகர் பிரசன்னா ஆதங்கம்!
நடிகர் பிரசன்னா இந்த அவலங்கள் குறித்து தனது வேதனையைப் பதிவிட்டுள்ளார். அதில், “ஜெயலலிதா அல்லது ஜெயராஜ் அல்லது ஜெயபிரியா. அடுத்த பரபரப்பான மரணம் / கொலை / கற்பழிப்பு செய்திகள் வரை மட்டுமே இவை பேசப்படும். பின்னர் நீதிக்காக மற்றொரு ஹேஷ்டேக்குகள் தேடப்படும். ஆனால் உண்மையில் மாற வேண்டியது ஒருபோதும் மாறாது! இதைப் பார்த்து பார்த்து சலித்துவிட்டது. சோகம் தொடர்கிறது! மறதி ஓரு தேசிய வியாதி” என்று தெரிவித்துள்ளார்.